என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amrit Bharat train"

    • அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.
    • ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் தொடக்கம்.

    வந்தே பாரத் அதிவேக சொகுசு ரெயில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரெயில் முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதால் கட்டணம் அதிக அளவில் உள்ளது.

    அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அம்ரித் பாரத் ரெயில் சேவை தமிழகம், மேற்கு வங்காளம் மாநிலங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா டவுன் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 3 ரெயில் சேவைகளும், மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலத்தில் 3 ரெயில் சேவைகளும் இதில் அடங்கும்.

    நாகர்கோவில்-நியூ ஜல் பைகுரி, திருச்சி-நியூ ஜல் பைகுரி, தாம்பரம்-சந்திர காசி ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவை தமிழகம்- மேற்குவங்க மாநிலம் இடையே இயக்கப்படுகிறது.

    இதேபோல அலிபு துவார்-பெங்களூரு, பாலூர் காட்- பெங்களூரு, ராதிகாபூர்-பெங்களூரு ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இது தவிர ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்- நியூ ஜல் பைகுரி அம்ரித் ரெயில் இன்று மேற்கு வங்காளம் ரங்கபாணி நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    இந்த ரெயில் முற்றிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி கொண்டதாகும். இதில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது.

    இந்த ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, பழனி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது.

    நியூ ஜல்பைகுரியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் அம்ரித் ரெயில் ஆந்திரா வழியாக எழும்பூர் நிலையம் வருகிறது. பின்னர் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம் , மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடைகிறது.

    சந்திரகாசியில் இருந்து நாளை 18-ந் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் சூலூர்பேட்டை வழியாக எழும்பூர் வந்து பின்னர் தாம்பரம் சென்ற டைகிறது.

    அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் 11 பொது இருக்கை பெட்டி களும், 2-இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பிரதமர் மோடி பாலூர்காட்-ஹிலி இடையே புதிய ரெயில் பாதை, துப்குரி-பலகட்டா பிரிவில் 4 வழிச்சாலை, சிலி குரியில் லோகோ ஷெட் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    • புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசத்திக்காக பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என இருந்த நிலையில், சேரக்கூடிய இடங்களை மிகவும் விரைவாக சென்றடையும் வகையில் வந்தே பாரத் என்ற ரெயிலை அறிமுகப்படுத்தியது.

    குறைந்த பெட்டிகளை கொண்ட ரெயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதிவேகமாக செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெயில் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது. கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் இந்திய ரெயில்வே அம்ரித் பாரத் ரெயில் என்பதை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    பீகார் மாநிலத்தின் தர்பங்கா- டெல்லியின் ஆனந்த் விஹார் இடையில் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அயோத்தி வழியாக செல்லும்.

    மற்றொரு ரெயில் மேற்கு வங்காளத்தின் மால்டா டவுண்- பெங்களூருவின் விஸ்வேஸ்வராய முனைமம் இடையே இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது. படுக்கை வசதி கொண்ட ரெயிலாகும். தற்போது எல்.இ.டி. லைட்டுகள், செல்போன் சார்ஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு 6 வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

    • அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
    • இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீண்ட தூர பயணம் என்றாலே பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் பயணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்து கொள்வது தான். பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரெயில்வே துறையும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வகையில் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    அம்ரித் பாரத் ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அடுத்த ரெயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது. இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

    அம்ரித் பாரத் ரெயில் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறனை கொண்டது. மேலும் இந்த ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிதாக வர இருக்கும் அம்ரித் பாரத் ரெயில்கள் மீது பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

    • தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    ×