என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ticket Reservation"

    பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

    பின்னர், பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

    தொடர்ந்து, பராசக்தி படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டான் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்நிலையில், சென்சார் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் 'பராசக்தி' படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

    தமிழ்நாடு முழுவதும் நாளை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'பராசக்தி' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

    ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்காக திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அன்புள்ள ரசிகர்களே,

    ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரும் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே பகிர்ந்து கொள்கிறோம்.

    ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    ஆன்லைன் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தைத் திரும்பப் பெறுவது தானாகவே அசல் கட்டண முறைக்கு மாற்றப்படும்.

    கவுண்டர் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தை நேரடியாக சென்று திரும்பப் பெறலாம்.

    உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விமான டிக்கெட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
    • கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட இப்போதே பயணதிட்டத்தை வகுத்து வருகிறார்கள்.

    தீபாவளிக்கு விமான பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். 90 நாட்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி உள்ளதால் தீபாவளி பண்டிகையையொட்டி விமான கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளன.

    இதில் அக்டோபர் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் எண்ணிக்கையும் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.

    பெங்களூரில் இருந்து பாட்னா செல்ல ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் எகிறி உள்ளது. இதேபோல் பெங்களூரில் இருந்து வாரணாசிக்கு ரூ.23 ஆயிரம், மும்பை-லக்னோ ரூ.19 ஆயிரத்து 292, பூனே-லக்னோ ரூ.19ஆயிரத்து 226, டெல்லி-கவுகாத்தி ரூ.18 ஆயிரத்து 573 ஆக கட்டணங்கள் உள்ளன.

    இதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.5083 ரூபாயும், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரூ.7,618 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.

    கடைசி நேரங்களில் ரெயில் மற்றும் பேருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த ஊரு செல்வதற்கு விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவர்.

    இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்க அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×