என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... 4 பேர் பலி
    X

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... 4 பேர் பலி

    • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

    Next Story
    ×