என் மலர்
நீங்கள் தேடியது "research"
- 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான்
- புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் தஇருக்கலாம் எ
இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.
நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள் , தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்றும் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று UCL இன் ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகிறார்.
புகைப்பிடிப்பவர்கள், வரும் புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால் 50 நாட்கள் வாழ்க்கையை இழப்பதைத் தவிர்க்கலாம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்த வலியுறுத்தி உள்ளது.
நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது.
- வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன
- உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பாராசிட்டமால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.
பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.
அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
- தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான தசை, இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான இருதய நோய்கள், பக்கவாதம், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய், மறதி நோய் (டிமென்ஷியா) ,மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Nestle, PepsiCo, மற்றும் Unilever உள்ளிட்ட உணவு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
- உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களே 70 சதவீதம் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக சர்வதேச அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nestle, PepsiCo, மற்றும் Unilever உள்ளிட்ட உணவு நிறுவனங்கள் இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக Access to Nutrition Initiative [ATNI ] அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது .
5-க்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் , குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8-ஆகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்தம் 30 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பேசிய ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே [Mark Wijne], அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை, அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை [ மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் மூலம்] அதிகப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களே 70 சதவீதம் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக சாப்ட் ட்ரிங்க்ஸ் குளிர்பானங்கள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நாடுகளில் சர்க்கரை நோய்கான மருந்துகள் மற்றும் மருத்துவம் மற்றொரு லாபம் கொழிக்கும் வியாபாராயமாக மாறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
- குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது, ஆனால் இங்கு குடிநீரில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் யுரேனியம் உள்ளது.
- பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
2017 இல் வெளியான உலக சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் லிட்டருக்கு 30 கிராம் வரை யுரேனியம் கலந்திருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறுகிறது.
ஆனால் சத்தீஸ்கரில் உள்ள துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக பலோடில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் கலந்துள்ளது.
மேலும் ஆறு மாவட்டங்களில் 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருக்கிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இதற்கான தீர்வு குறித்து பெரிய அளவிலான விவாதமோ முன்னெடுப்போ மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில் மட்டுமின்றி முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
- இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
- வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.
இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.
இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.
- பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
வண்டலூர்:
கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் காலநிலை பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
நடைபாதை, பூச்செடிகள், மரங்கள், சிறிய குளங்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் எந்தவித கட்டமைப்பு பணிகளையும் முழுமை பெறாமல் தொடங்கிய கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வருகிறோம்.
அதன்படி 16 ஏக்கர் பரப்பளவில் மக்களுக்கு பயன்படும் வகையில் காலநிலை பூங்கா ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த காலநிலை பூங்காவில் பல்வேறு வகையான செடி கொடி மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்கான குளங்களும் உள்ளன.
மக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காகவும், குழந்தைகளின் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த பூங்கா பொது மக்களுக்கு ஒரு பொழுது போக்கான பூங்காவாக அமையும்.
இந்த பூங்காவும், முடிச்சூர் பகுதியில் அமையும் ஆம்னி பஸ்நிலையம் ஆகிய இரண்டையும் அடுத்த மாதம் முதல் அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ெரயில் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் 10 நாட்களுக்குள் நானும் இந்த மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசனும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்
- கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளது
இந்தியாவில் வரும் 2045 க்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் [ICMR] எச்சரித்துள்ளது. BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.
ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின்படி , 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.
- இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும்
- 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன
உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. இந்தியாவில் விற்பனையாகும் அத்தகு உப்பிலும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன.
- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.
உலகளவில் பிரபல பிராண்டுகளின் ஆணுறை மற்றும் லூப்ரிகண்ட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுத் தன்மை கொண்ட இரசாயணங்களை பயன்படுத்தி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சில ட்ரோஜன் ஆணுறை மற்றும் கே-ஒய் ஜெல்லி லூப் ஆகியவற்றில் உள்ள அதிகளவு நுண்ணுயிரி பொருட்கள் சருமம் வழியே உடலுக்குள் சென்று பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
மனிதர்களின் பிறப்புறுப்புகள் மிக மெல்லிய சருமம் மற்றும் ஏராளமான இரத்த நாளங்கள் உள்ளதால் இவை நச்சு தன்மை கொண்ட இரசாயணங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின்மை, விந்தணு பாதிப்பு மற்றும் கர்ப்பகால குறைபாடுகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் இரசாயணங்கள் இரத்த நாளங்கள் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை அதிகப்படுத்தும்.
மமாவேஷன் எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இதுபோன்ற பொருட்களில் ஃபுளோரைன் இடம்பெற்று இருக்கிறதா என சோதனை செய்தனர்.
இதில் குறிப்பிட்ட ரக ஆணுறைகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமான ஃபுளோரைன் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 29 பொருட்களில் கிட்டத்தட்ட 6 பொருட்களில் (20 சதவீதம்) பாதுகாப்பற்ற அளவில் ஃபுளோரைன் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
- கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
- கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும்
அமரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- காஃபி குடிக்காதவர்கள் ஆறு மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்.
- காஃபி குடிப்பவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் குறைவு.
காஃபி உடல் நலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காபி குடிக்காதவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும், காபி குடிக்கக் கூடியவர்கள் குறைந்த நேரம் உட்கார்ந்தால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது. பயோமெட் சென்ட்ரல் (BioMed Central) இதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மூலம் இது தெரியவந்துள்ளது.
காஃபி குடிக்காத தனி நபர்கள் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழக்க 60 சதவீதம் வாய்ப்புள்ளது. அதேவேளையில் காஃபி குடிக்கக்கூடியவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருப்பவர்களாக இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 13 வருடம் 10 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.
தினந்தோறும் ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்து இருக்கக்கூடிய நபர்கள் காஃபி குடிப்பவர்களை விட காஃபி குடிக்காதவர்களுக்கு ஆபத்து அதிகம் என சீனாவில் சூசோப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி என்று ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது. காஃபி குடிப்பவர்கள் 24 சதவீதம் குறைவான உயிரிழப்பு ஆபத்தை எதிர்கொள்ளவதாக அந்த ஆய்வு தெரிவித்தது.
உட்கார்ந்து இருக்கும் பழக்கம் உடையவர்களின் உடல்நலத்தை காஃபி மேம்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
காஃபியே குடிக்காதவர்களைவிட அதிகமாக காஃபி குடிப்பவர்களுக்கு அனைத்து வகையிலான ஆபத்தில் இருந்து 33 சதவீதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காஃபியில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது. இருப்பினும், இறப்பதற்கான ஆபத்தை குறைக்க காபி உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றும், இதய நோயால் இறக்கும் அபாயம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அதிகம் என்றும் ஆராய்சிக்குழு கண்டறிந்துள்ளது.