search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில்  சுகாதார  பணிகள் குறித்து நகா்மன்ற  தலைவா் ஆய்வு
    X

    கோப்புபடம். 

    தாராபுரத்தில் சுகாதார பணிகள் குறித்து நகா்மன்ற தலைவா் ஆய்வு

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    Next Story
    ×