என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic"

    • தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

    கோவில்பட்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் மேற்கொண்டுள்ளார்.

    இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை போதகர்களை சந்தித்தார். பின்னர் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    அதனைத்தொடர்ந்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அச்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதே போல் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் கடலை மிட்டாயை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



    இதனை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சிறு, குறு தொழில்கள் அதிகமாக செயல்பட்டால் தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. எப்போதெல்லாம் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருந்தது.

    இதனை குறைக்க சிறு, குறு தொழில் துறையினர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை செய்தோம். தமிழகத்தில் முன்பு தீக்குச்சி இறக்குமதிக்கு 5 சதவீதம் மாநில அரசு வரி இருந்தது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 5 சதவீத வரியையும் ரத்து செய்தார்.

    தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர். இந்த தொழிலை காக்க பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் என்கிற அளவுக்கு இங்குள்ள கடலை மிட்டாய்கள் தரமானது என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மற்ற பகுதிகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் லேபிள் தயாரித்து சோதனை முறையில் அதனை நடைமுறைபடுத்தலாம்.

    நாடு செழித்தால் தான் உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இதற்காகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சி அதனை கிடப்பில் போட்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தாமிரபரணி-வைப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

    இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவு விளைவிக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகத்தில் 3 எத்தனால் தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்டு 2 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு 40 டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதற்கு வருங்காலத்தில் தினமும் எத்தனால் தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதனால் அதன் விற்பனையும் அதிகரிக்கும்.

    அதேபோல் பருத்தியும் அதே அளவு விளைவிக்கப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் சிறக்க அ.தி.மு.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    கோவை:

    நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனால் மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா? என்பதை அறிய 3 மாதங்களுக்கு முன்பு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை தொடங்கினர்.

    குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் சிவசெல்வக்குமார் கூறியதாவது:-

    நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் கெடுவது மட்டுமின்றி, மனிதர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய முடிவு செய்தோம்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது ஆராய்ச்சியை தொடங்கினோம். இதற்காக நாங்கள் குழந்தைகளிடம் இருந்து ரத்தம் எடுக்காமல், வீணாகக்கூடிய நஞ்சு கொடிகளை சேகரித்து அதில் உள்ள ரத்தம் மூலமாக எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஆராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

    எங்களது ஆரம்ப கட்ட பரிசோதனையில் நாங்கள் நஞ்சுக்கொடிகளில் உள்ள ரத்தத்தை எல்.இ.எம்.எஸ் என்ற கருவி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.

    அப்போது அந்த ஆய்வில், சிசுக்களின் நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.

    எனவே கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த வேண்டாம்.

    இதேபோன்று விவசாயிகளின் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதா? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டோம்.

    இதற்காக கோவை வேடப்பட்டி பகுதியில் 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா? என ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை, ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.

    மேலும் பூச்சிக்கொல்லி தாக்கம் காரணமாக, அவர்களது ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தோம்.

    பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

    நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
    • 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.

    அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
    • தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

    பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.

    மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.

    • ராவுத்தர் கோவில் மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை பணி.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது

    இதில் பாதிரங்கோட்டை தெற்கு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கருப்பட்டி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், மற்றும் ஆண்டாாங்கொள்ளையில் உள்ள ராவுத்தர் கோவில், மற்றும் பள்ளி வளாக தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்6வது நாள் நிகழ்ச்சி யாக மரக்கன்றுநடுவிழா நடைபெற்று மரக்கன்று களை தொடர்ந்து பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், செல்லத்துரை, தலைமை தாங்கினார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுதாகர், வரவேற்று பேசினார், மேலும் சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார், இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவன், அகத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மீனம்பாக்கம் :

    நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    பழனியில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு கழிவுகளை சாலையோரம் வீசி வருகின்றனர்.

    பக்தர்களை குறிவைத்து அடிவாரம் , கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் முளைத்து வருகின்றன. இவர்களும் பல்வேறு கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் பழனியில் அதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பல்வேறு குப்பைகளை சாைலயோரம் வீசிச்செல்கின்றனர். இதனை கடந்து செல்லும் நபர்கள் முகம்சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே நகராட்சி மற்றும் தேவஸ்தானம் சார்பில் போதிய ஊழியர்களை நியமித்து குப்பைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்ட்ரா, போர்க், ஸ்பூன் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

    மாநில அரசின் இந்த முடிவு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலாளர் சதீஷ் தாரடே தெரிவித்தாா்.

    • நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.
    • கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

    நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

    பல பொருட்கள் உடைந்து உள்ளன.

    அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற கல்வி நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் மஞ்சப்பை பிரசா ரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (2 எண்ணிக்கைகள்) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற மே மாதம் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கல்.
    • சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ராவுக்கு வந்த புகாரின் பேரில் அவர் தலைமையில் அலுவலர்கள் சசிகுமார், பாலகுரு, சுப்பிரமணி, ரெங்கராஜன் ஆகியோர் போலீசார் உதவியுடன் திருவையாறு அந்தணர்குறிச்சியில் உள்ள ரெங்கராஜ் மகன் மகேஷ்வரன் (வயது 35) என்பவரது குடோனில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும். உடனே புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×