மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் கப், தட்டுகளுக்கான தடை நீக்கம்

மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் கப், தட்டுகளுக்கான தடை நீக்கம்
Published on

மும்பை :

மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்ட்ரா, போர்க், ஸ்பூன் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

அதே நேரத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

மாநில அரசின் இந்த முடிவு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலாளர் சதீஷ் தாரடே தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com