search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhogi festival"

    • மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
    • போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டது.

    சென்னை:

    போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை விமான நிலையம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதிக புகைதரும் பொருட்களை எரிக்கவேண்டாம் என்று ஏற்கனவே விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்தனர்.

    இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருந்ததால் புகையும் சேர்ந்து மூழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகையாகக் காட்சி அளித்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையும் தெரியாத அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப் பட்டன.

    இதேபோல் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள் புகை-பனிமூட்டம் காரணமாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் என சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை சீரானது.

    • சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
    • மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் நாளடைவில் பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் எரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் போகி பண்டி கை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.

    அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.

    பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. 20-ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது.

    இப்படி மெதுவாகவே செல்ல முடிந்ததால் பயண நேரம் அதிகமானது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய பயண நேரம் ஒரு மணி நேரமானது.

    சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். சென்னை மாநகரில் போகி புகையால் பெருங்குடி பகுதியில் காற்று மாசு மிக அதிக மாக காணப்பட்டது.

    பெருங்குடி பகுதியில் காற்றின் தர குறியீடு 289-ஐ எட்டி இருந்தது. இந்த அளவு மணலியில் 272 ஆக பதிவாகி இருந்தது.

    எண்ணூரில் 232 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 216 ஆகவும், ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் 207 ஆகவும் காற்றின் குறியீட்டு அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    போகி புகை மூட்டத்துடன் டயர், டியூப்களை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையும் கலந்தது. இதனாலேயே காற்று மாசு அதிகரித்து உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்தனர். மூச்சுத் திணறலால் அதிக பாதிப்புகளை அவர்கள் சந்தித்தனர். போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டயர், டியூப் உள்ளிட்ட மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரித்து நச்சுப்புகையை பரவ விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது.
    • வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் போகிப் பண்டிகையில் பழைய பொருட்கள், டயர்களை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து ஆடுவார்கள்.

    அதில் இருந்து வெளியேறும் புகை மூட்டம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும். விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டதும் உண்டு.

    ஆனால் இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது. வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பழையதை எரித்தார்கள்.

    தற்போது பனிக்காலம் என்பதால் அதிகாலையில் பனிப்புகை பெருமளவில் சூழ்கிறது.

    அத்துடன் போகிப் புகையும் இணைந்ததால் பல இடங்களில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வந்த வாகனங்கள் தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது.

    வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சாலைகளில் பயணித்தன.

    சில தெருக்களில் எரித்த பிறகு சாம்பலில் தண்ணீர் ஊற்றி எடுத்து அப்புறப்படுத்தினார்கள். இந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் முடிந்து விடும் என்கிறார்கள் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள்.

    • மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு.
    • அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகி பண்டிகை என்றால் பழையனவற்றை கழித்தல் என்று நினைத்து பலரும் தங்கள் வீடுகளில் உள்ள பழையப் பொருட்களை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் போகியின் உண்மையான நோக்கம் வேறு. அதுபற்றி பார்ப்போம்...

    ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.

    வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

    மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும்.

    மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.

    வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை- இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.

    கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர்.

    எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.

    ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.

    பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

    மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

    • போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும்.
    • நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    எனவே குமரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படும் இந்த போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும். எனவே புகையில்லா போகி கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவை இல்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
    • போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாய்களால் மூச்சு திணறல் கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவை இல்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இலைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்,காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாய்களால் மூச்சு திணறல் கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

    வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
    • பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையி ல்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்க ப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படு வதோடு விபத்து களுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்ப ண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
    • போகி பண்டிகை பழைய பொருட்கள், குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் ஆகியோரும் போகி  பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
    • போகிப்பண்டிகை யின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

    எனவே, போகிப்பண்டிகை யின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
    • புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போகிப்பண்டிகையன்று பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க வேண்டும் என்ற நோக்கில், பழையன கழிதலும், புதியன புகுதலுமென நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    இத்தகைய பழக்கம் பெரும் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேறுவிதமாக கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • தேவையில்லாத பொருட்களை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    எனவே சென்னையிலுள்ள 1-வது முதல் 15-வது வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    சென்னை:

    மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

    அவ்வகையில் இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் சென்னையில் போகி பண்டிகையை கொண்டாடினார்.

    ஆனால், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

    ஏற்கனவே அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் போகி புகையும் இணைந்ததால், பெருநகரங்களில் காலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. சென்னையின் பல்வேறு இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காற்றின் தரத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து ஆய்வு செய்தது.  #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    ×