search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports equipment"

    • கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அரசு பள்ளி மைதானத்திற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வந்தார். அப்போது கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியில் ஈடுபட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடையே பேசினார்.

    அவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மாணவ ர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் கூறும்போது, விளை யாட்டில் ஈடுபடும்போது உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கினேன் என தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு போலீஸ் துறை ஆக்கப்பூர்வமான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு போலீசார் பாலமுருகன், சீனு, ராமு, ஜனா, மணிகண்டன் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    • மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சின்னக் கோவிலாங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டி களுக்கான பயிற்சிக்காக மாணவ, மாணவிகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தி.மு.க. ஒன்றிய செய லாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெள்ளத் துரைபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திருமலைகுமார், மகேந்திரன், முகேஷ், கிளை செயலாளர் செந்தில்குமார், சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றிய பிரதிநிதி சுதா, பால்பாண்டியன், ராமசுப்பு, மகேந்திரன் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும் என நகராட்சி தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
    • இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சேதுபதி நகர், தங்கப்பா நகர், கோட்டைமேடு தெரு மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதியவர்கள், குழந்தைகள், அந்த பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் சேதமடைந்துள்ளன.

    புதிய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் அருகில் அமைந்துள்ள பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இங்கு திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது, மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.

    இது குறித்து நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் உள்ள பூங்காக்கள், ஊரணிகளை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, வேலிகள் அமைக்கப்படுகிறது. பசுமையாக்கல் திட்டத்தில் இங்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டு தற்போது 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்த்துள்ளோம்.

    ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரித்து பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது முயற்சியில் தங்கப்பாநகர், மகர்நோன்பு பொட்டல் பூங்காவில் ரூ.36 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், பூச்செடிகள் வைக்க உள்ளோம்.

    இதே போல புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எஸ்.கே. பூங்காவும் ரூ.16 லட்சத்தில் சுற்றுச்சுவருடன் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    • இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன.
    • விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது

    கடலூர்:

    கடலூர் பாரதி சாலையில் மிகவும் பிரபலமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்கா சுற்றி நடப்பதற்கு நடை பாதைகள் மற்றும் பூங்காவிற்குள் அனைவரும் இளைப்பாற மரங்கள் நடப்பட்டு உள்ளன.


    தற்போது இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன. அதோடு நடைபாதைகளில் உள்ள கற்கள் முழுவதும் சிதைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றன.

    இது மட்டும் இன்றி பூங்காவில் உள்ள கட்டிடம் சிதலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் போது 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் கட்டணம் வசூலிப்பது ஏற்றவாறு உள்ளே எந்த வித வசதியும் ஏற்படுத்தவில்லை. அது மட்டும் இன்றி தினந் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பூங்கா விற்கு வந்து விளையாட்டுப் பொருட்களில் விளையாட செல்ல நேர்ந்தால் அங்கு உடைந்திருக்கும் விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது போல் உள்ளது என பெற்றோர்கள் குமுறி வருகின்றனர்.

    இதற்காக விளையாட்டுப் பொருட்களில் விளையாடாமல் பூங்காவில் ஓடிப் பிடித்தும், கண்ணாம்பூச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கட்டணம் செலுத்தி சிறுவர்கள் விளையாடுவதோடு உடைந்த விளையாட்டுப் பொருட்களில் பெற்றோர்களின் பாதுகாப்புடன் சிறிது நேரம் மனம் நொந்தபடி விளையாடி செல்வதை காண முடிந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவதும், பெரியோர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதும், விழுவதால் உடலில் காயம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது    இது தொடர்பாக அங்குள்ள நபர்களிடம் இது தொடர்பாக கேட்டால் 5 ரூபாய்க்கு இந்த வசதி தான் செய்ய முடியும். விருப்பம் இருந்தால் வரவும் இல்லை என்றால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கறாராக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்  மேலும் கடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டண வசூலிக்கப்படும் பூங்காவில் அடிப்படை வசதிகளான சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், அனைவரும் நடந்து செல்லும் வகையிலான நடைபாதைகள் மற்றும் அவசர தேவைக்காக கழிவறை வசதி எதுவும் இல்லாமல் இது போன்ற பூங்காக்களால் ஏதேனும் சிறுவர்களுக்கு உயிர் பலி நேரிட்டால் இதற்கு யார் பதில் கூறுவார்கள்?  உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அதிகாரிகள் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காது? இதற்கான முழு நடவடிக்கை எடுப்போம் என வாசகங்களை அடுக்கிக் கொண்டு சொல்வதோடு அனைவரின் உயிரும் மிக முக்கியம் என கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பூங்காவை ஆய்வு செய்து இதற்கான நிரந்தர நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ஆனால் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என பொதுமக்கள் ஒருபுறம் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும் .

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

    • நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.
    • கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

    நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

    பல பொருட்கள் உடைந்து உள்ளன.

    அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி இளைஞர்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மைய நிர்வாகி மதன்பாபு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
    • இதில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தங்கராசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு பகுதி இளைஞர்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மைய நிர்வாகி மதன்பாபு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தங்கராசு, எழிலன் ,முன்னாள் கவுன்சிலர் தனசேகர், நவீன், கோபிநாத் ,செந்தில் முருகன், சந்துரு மற்றும் பார்த்திபன், ஸ்ரீகாந்த், ஐடி பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்ராஜ், குமரன், ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
    • விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தனது தொகுதி மக்களுக்கு பல்வே று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

    விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரில் சந்தித்து தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதை ஏற்றுக்கொண்ட அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×