என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic bottle"

    • கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    கோவை:

    நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனால் மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா? என்பதை அறிய 3 மாதங்களுக்கு முன்பு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை தொடங்கினர்.

    குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் சிவசெல்வக்குமார் கூறியதாவது:-

    நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் கெடுவது மட்டுமின்றி, மனிதர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய முடிவு செய்தோம்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது ஆராய்ச்சியை தொடங்கினோம். இதற்காக நாங்கள் குழந்தைகளிடம் இருந்து ரத்தம் எடுக்காமல், வீணாகக்கூடிய நஞ்சு கொடிகளை சேகரித்து அதில் உள்ள ரத்தம் மூலமாக எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஆராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

    எங்களது ஆரம்ப கட்ட பரிசோதனையில் நாங்கள் நஞ்சுக்கொடிகளில் உள்ள ரத்தத்தை எல்.இ.எம்.எஸ் என்ற கருவி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.

    அப்போது அந்த ஆய்வில், சிசுக்களின் நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.

    எனவே கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த வேண்டாம்.

    இதேபோன்று விவசாயிகளின் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதா? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டோம்.

    இதற்காக கோவை வேடப்பட்டி பகுதியில் 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா? என ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை, ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.

    மேலும் பூச்சிக்கொல்லி தாக்கம் காரணமாக, அவர்களது ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தோம்.

    பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

    நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

    • கடந்த 23-ந்தேதி காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம்தொடங்கப்பட்டது.
    • திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறியிருந்தனர்.

    பாட்டிலுக்கு ஒரு ரூபாய்

    இதற்கு நிரந்தர தீர்வு காணுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் முறையாக டவுன் மண்டலத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டமானது டவுன் சுகாதார அலுவலகத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தொடங்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டமானது தமிழகத்தில் நெல்லை மாநகராட்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 3 நாட்களுக்குள் சுமார் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டம் எனவும், மக்களின் நிலை உயரவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு ஏற்ப நெல்லையில் இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரத்திற்குள் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குஜராத் மாநிலம் வதோரா ரெயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் அதன் எடைக்கு ஏற்பட பணம் தரும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. #Vadodara
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் வதோரா ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை சுக்கு நூறாக உடைக்கப்படுகிறது.

    பின்பு நாம் போடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பொருளின் எடைக்கு ஏற்ப பணம் வழங்குகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போட்ட பிறகு இயந்திரத்தில் பயணிகள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்கள் பேடீஎம் (Paytm) கணக்கில் ரூ.5 பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வதோரா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய இயந்திரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. #Vadodara
    ×