search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bags"

    ஏரி உள்ளிட்ட இடங்களில் ஏதாவது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்காக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    புயல் அறிவிப்பு எதிரொலியாக செஞ்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் தாக்கம் எதிரொலியாக இன்று முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    ஏரி உள்ளிட்ட இடங்களில் ஏதாவது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்காக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதை செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மேற்பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் கிராமப் பகுதிகளில் முகாமிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.

    • பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாமதியழகன் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார்.

    பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    இதில் ஊராட்சி துணை தலைவர் திவ்யாசிவக்குமார், ஊராட்சி செயலாளர் குமரமோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அரவிந்த் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
    • புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் :

    நாமக்கல் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகர் நலஅலுவலர் டாக்டர் பரிதாவாணி, சுகாதார துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் நாமக்கல் கடைவீதி, நந்தவனத்தெரு, மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ 6,000 அபராதம் விதித்தனர்.

    • தண்ணீர் வரத்து அதிகமுள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்லணையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிேயார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசியதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.80 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல்அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாய கரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச்செல்லாமல் பெற்றோர்கள்தங்களது குழந்தைகளை பாதுகா ப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழுக்கள், வட்ட அளவிலான குழுக்கள், சரக அளவினால் குழுக்கள் முதல்நிலை பணியாற்றுபவர்கள், கால்நடை பராமரி ப்பாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மரம்வெட்டு பவர்கள், போதுமான ஜெனரேட்டர், கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையி ல்வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவா ய்த்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சார துறை மற்றும் அனைத்து துறைகளும்ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் பேரிடர்காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிகபாதுகாப்பு முகாம்அ மைக்கப்ப ட்டுள்ளது.

    மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைதயார்நிலையில் உள்ளது. பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும்தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப்எண். 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தினால்ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த்,வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குனர்ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றது
    • தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஏர்வாடி:

    களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் வக்கீல் ஆனந்த், வழக்கறிஞர் வெள்ளத்துரை, சேர்மத்துரை மற்றும் மண்டல மேலாளர் மனோகர் ராயன், பிராந்திய மேலாளர் லிங்கபூசன், மார்கெட்டிங் மேலாளர் ஜான் சார்லஸ், கிளை மேலாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியை வள்ளி, ஆசிரியர்கள் லுசியா, செல்வம், ஜமிலா பானு, சாந்தி, உஷாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×