பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாமதியழகன் தொடங்கி வைத்தார்.

பேரணியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார்.

பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

இதில் ஊராட்சி துணை தலைவர் திவ்யாசிவக்குமார், ஊராட்சி செயலாளர் குமரமோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அரவிந்த் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com