என் மலர்
நீங்கள் தேடியது "லான்செட்"
- பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குகள் அதிகரித்து வருகிறது.
- பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் 2040-க்குள் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் தங்கி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
இந்நிலையில், லான்செட் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான விவரம்:
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
கருப்பையில் உள்ள சிசு முதல் முதுமை வரை அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு உலகளவில் ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவாகிறது. தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் 8,000 மெகா டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியை மாசுபடுத்துகின்றன.
வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடுகள் இரு மடங்கிற்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்றும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை வெளிப்பாடு ஆகியவை அதிகரிக்கும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.
- 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- சிவப்பு இறைச்சி சாப்பிடுவதற்கும் நீரிழிவு அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.
இந்தியாவில் 2021-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வின்படி 101 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

136 மில்லியன் மஞ்சள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 315 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் `லான்செட்' நடத்திய சமீபத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பன்றி இறைச்சி, கொத்து இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதற்கும் 2-வது வகை நீரிழிவு நோய்க்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு நாளைக்கு 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வழக்கமாக உட்கொள்வது 2 துண்டு பன்றி இறைச்சியை சாப்பிடுவதற்கு சமம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது அடுத்த 10 ஆண்டுகளில் 2-வது வகை நீரிழிவு நோய் வருவதற்கான 15 சதவீத ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 100 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை உட்கொள்வது 2-வது வகை நீரிழிவு நோயின் 10 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடைய ஒரு சிறிய மாமிசத்துக்கு சமம் என தெரியவந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், கோழி, வான்கோழி அல்லது வாத்து போன்ற 100 கிராம் கோழிகளை வழக்கமாக உட்கொள்வது 8 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறுகையில், `லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்தின் ஆய்வுகள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதற்கும் நீரிழிவு அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.
இந்த சான்றுகள் நமது உணவுத் தேர்வுகள் ஒட்டு மொத்த நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மேலும் ஆராய வைக்கிறது. ஆனாலும் இந்தியாவில் உட்கொள்ளப்படும் சிவப்பு இறைச்சியின் அளவு குறைவாகவே உள்ளது என்றார்.






