என் மலர்
நீங்கள் தேடியது "Diabetes"
- உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது.
- தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சென்னை:
உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டிற்கு 34 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்.
இந்தியாவில் 20 முதல் 79 வயது வரை உள்ள முதியவர்கள் 9 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசின் பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 9 லட்சம் பேர் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நீரிழிவு, வாதம் நோயினால் 72 லட்சத்து 70 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஏற்பட்டு 33 ஆயிரத்து 185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 26,448 பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3169 பேருக்கு உறுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.
எனவே தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீரிழிவு நோயை அலட்சியமாக கருதாமல் கவனமாக கையாள வேண்டும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நல வாழ்வு குழு இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தர, மருத்துவ கல்வி இயக்குனர் ராஜ குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அமெரிக்க விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு பண்டிகை நாளிலும் ‘அளவுக் கட்டுப்பாடு' முக்கியம்.
நீரிழிவு நோயை தடுக்க இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கடந்த 2023-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 2021-ம் ஆண்டிலேயே இந்தியாவில் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள், 13.6 கோடி முன்-நீரிழிவு நோயாளிகள் மற்றும் 31.5 கோடி உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் 'லோகல் சர்கிள்ஸ்' என்ற நிறுவனம் நடப்பு ஆண்டு நடத்திய ஆய்வில், 74 சதவீத நகர்ப்புற குடும்பத்தினர் மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளை உண்கிறார்கள் எனவும், திருவிழா காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர 5 சதவீதம் பேர் தினமும் சர்க்கரை உட்கொள்கிறோம் என்றும், 26 சதவீதம் பேர் மாதத்திற்கு 15 முதல் 30 முறை வரை சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 43 சதவீதம் பேர் தங்களின் குடும்பத்தில் பெரும்பாலானோர் ''சர்க்கரை அடிமைகள்'' என்று கூறியுள்ளனர். அதேசமயம், 70 சதவீதம் பேர் ''சர்க்கரை அளவு 30 சதவீதம் குறைந்த மாற்று தயாரிப்புகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்துவோம்'' எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டாக்டர்கள், நிபுணர்கள், தீபாவளி பண்டிகையால் இந்தியாவில் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரித்து உள்ளது என்றும், அதனால் நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள் இனிப்புகளோடு சாக்லெட், பிஸ்கட், கேக் போன்ற இனிப்புகளையும் அடிக்கடி உண்பதாக தெரியவந்துள்ளது. தீபாவளி என்றாலே இனிப்புகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை தான் மக்கள் அதிகம் எடுத்து கொள்கின்றனர்.
இதோடு இறைச்சி வகைகள் மற்றும் பிரியாணியும் முக்கிய உணவாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தீபாவளி காலத்தில் நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி இனிப்புகளை அதிக அளவில் எடுத்து கொள்வதுதான்.
சமீபகாலமாக சிலர் இனிப்புகளுக்கு பதிலாக பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை பரிசாக வழங்க ஆரம்பித்து உள்ளார்கள். இது நல்ல முன்னேற்றம். உப்பு இல்லாத பருப்புகள் நல்லது. இனிப்புகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்தது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியோடு இனிப்புகளை அனுபவிப்பது தவறு அல்ல.
ஆனால் அவற்றை அளவுக்கு மிஞ்சாமல் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனமான வழி. இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு பண்டிகை நாளிலும் 'அளவுக் கட்டுப்பாடு' முக்கியம். திருவிழாக்கள் மகிழ்ச்சியை தரட்டும். ஆனால் நோய்களை அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
- 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என லான்செட் ஆய்விதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
லான்செட் அறிக்கை 19.6 சதவீத ஆண்களும் 20.1 சதவீத பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இதில் 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மீதம் உள்ளவர்களில் 59 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் இதய நோய் ஆபத்தும் கொலஸ்டிரால் பாதிப்பை கொண்டுள்ளனர்.
எனவே இந்தியர்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
40 வயதைக் கடந்துவிட்டாலே 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c ரத்தப் பரிசோதனை செய்து 3 மாத ரத்த சர்க்கரை அளவின் சராசரியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
- இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது
இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.
நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.
2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.
அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,
வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் இழப்பு என்பது ஆங்கிலத்தில் 'அம்னீசியா' என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணங்கள்:-
1) ஸ்ட்ரோக் (பக்கவாதம்): இதில் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நினைவாற்றலுக்கு பொறுப்பான பகுதிகளில் சேதம் உண்டாகி ஞாபக மறதி ஏற்படுகிறது, 2) மூளைக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் மூளை காயங்கள் அல்லது விபத்துக்கள், 3) மூளையில் ஏற்படும் நோய் தொற்று, 4) நீரிழிவு நோய், 5) சில மருந்துகளின் பக்க விளைவுகள், 6) நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம், 7) வளர்ச்சிதை மாற்றம் நோய்க்குறி, 8) தைராய்டு சுரப்பி குறைபாடு, 9) மன அழுத்தம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகமாகும் போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தை குறைத்து நரம்பணுக்களில் சேதத்தை உண்டாக்கி நினைவாற்றலை குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் மூளையில் உள்ள நரம்பு செல்களில் உள்ள இன்சுலின் ஏற்பிகள் (ரிசெப்டர்) தூண்டப்படுவது குறைந்து ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் எதிர்மறை நிலையால் மூளையில் அமிலாய்டு புரதங்களின் பிளேக்குகள் அதிகமாகி ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு பெரும்பாலும் சமீபத்திய நிகழ்வுகள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரை கலந்தாலோசித்து அதற்குரிய மருந்துகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதி பிரச்சினை வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:-
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும். குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வால்நட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்குங்கள். மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.
- உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
- அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக 'பாலிடிப்சியா' அல்லது 'தாகமிகுமை' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். பாலிடிப்சியாவில் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் தாகம் குறையாது. இது ஏற்பட முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஆகும். இருப்பினும் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதால், கீழ்க்கண்ட காரணிகளில் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படலாம்.
1) நீரிழிவு இன்சிபிடஸ்: இதில் அதிகமான அளவு சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை இழக்க செய்து, தாகத்தை அதிகரிக்கிறது.
2) முதன்மை தாகமிகுமை (பிரைமரி பாலிடிப்சியா): உடலியல் தூண்டல் இல்லாத நிலையிலும் உண்டாகும் அதிக தாகம் மற்றும் நீர் பருகும் நிலை.
3) சைக்கோஜெனிக் பாலிடிப்சியா அல்லது உளச்சார்பு தாகமிகுமை: கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களிடம் காணப்படும் அதிகமான நீர் உட்கொள்ளல்.
4) நீர்ச்சத்து இழப்பு: வாந்தி, வயிற்று போக்கு, அதிகம் வியர்த்தல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடு.
5) அதிக உப்பு: அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.
6) செரிமானம் தொடர்பான பிரச் சினை: இதில் உணவை ஜீரணிக்க அதிமான அளவு தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் அதிகரிக்கிறது.
7) ரத்த சோகை.
8) உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
9) கடுமையான உடற்பயிற்சி
10) உடலில் வேறு எங்கேனும் ஏற்படும் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு
11) அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.
12) மருந்துகளின் பக்கவிளைவுகள் (டையூரிடிக்ஸ், லித்தியம்)
13) ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் (ஹைபோகலீமியா)
14) மிகை தைராய்ட் நிலை (ஹைப்பர்தைராய்டிசம்)
மேற்கூறிய ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
- பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
- காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும்.
வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.

கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும். வேர்க்குரு ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்.
வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.

இதனை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணிய கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.
வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்த பட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும் போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தா லோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.
- பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
- மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது.
- சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது.
நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.

இதில் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
மேலும் இதிலுள்ள சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க துணை புரிகிறது. நன்னாரி சர்பத் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, நன்னாரி சருமத்திற்கு பொலிவை தருவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது. நன்னாரி சர்பத்தை குடிப்பதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. எனினும் இதனை அதிக அளவு குடிக்கும் போது இதில் உள்ள சபோனின் சில சமயங்களில் வயிற்றில் எரிச்சல் அல்லது புண் போன்றவற்றை உண்டாக்க கூடும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பின்னரே நன்னாரி சர்பத்தை பருக வேண்டும். நன்னாரி சர்பத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்க கூடும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமலோ அல்லது சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை கலந்தோ பருகலாம். நன்னாரியை சர்பத் வடிவில் குடிப்பதை விட வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு தினசரி தேவைகளுக்கு குடிப்பதற்கு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
- வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.
2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.
3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.
4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.
5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.
7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.
8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.






