என் மலர்
நீங்கள் தேடியது "Diabetes"
- நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.
- காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலுக்கு ஊட்டமளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடும். இன்சுலின் வெளியீட்டையும் கட்டுப்படுத்தும். எனவே அன்றைய நாளின் முதல் உணவாக வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படும் காலை உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த காலை உணவில் முட்டைகளை சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் முட்டைகளில் கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். புரத சத்து மிகுந்திருக்கும். ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.
இது நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவும். எனினும் இரண்டு முட்டை சாப்பிடும் விஷயத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு முட்டை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நார்ச்சத்து இதில் உள்ளது.
இதனை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக கொண்டிருக்கும் ஸ்மூத்திகளையும் தயார் செய்து காலை உணவுடன் பருகலாம். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். சியா விதைகளின் உதவியுடனும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்துகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க துணை புரியும். காலை உணவில் பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக பராமரிக்கப்படும்.
- எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று.
- நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.
எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. அதுபோல் நிறைய பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். அப்படி சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.
அல்லது ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். ரத்தத்தை வடிகட்டவும், கழிவுப்பொருட்களை அகற்றவும் உதவும் சிறுநீரகங்கள் அந்த வகை உணவுகளை உட்கொள்வதற்கு கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்கள் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்காவிட்டால் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உலர்த்துதல், உப்பிடுதல், வெப்பத்தில் சூடுபடுத்துதல் போன்ற செயல்முறைகள் மூலம் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் வெளியேறிவிடும்.
பன்றி இறைச்சியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயார் செய்யப்படும் இறைச்சி, வகையான சாசேஜ் போன்றவற்றை சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட அந்த உணவுகளில் அதிக சோடியம் உள்ளன. இது தினசரி அனுமதிக்கப்பட்ட அளவுகளில் 60 முதல் 70 சதவீதம் அதிகமாகும். எனவே அத்தகைய உணவுகளை தினமும் உட்கொண்டால் சிறுநீரக செயல்பாடுகளை சிதைத்துவிடும்.
அடர் நிற சோடாக்கள்: இப்போது சோடாக்கள் பல்வேறு வண்ணங்களிலும், சுவைகளிலும் வெளிவருகின்றன. பெரும்பாலும் குளிர்பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் கொண்ட அடர் நிற சோடாக்கள் கலக்கப்படுகின்றன. 350 மி.லி. கொண்ட பானங்களில் 90 முதல் 180 மி.கி வரை சோடாக்கள் சேர்க்கப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிக்கு அனுமதிக்கப்படும் பாஸ்பரஸ் அளவை விட பல மடங்கு அதிகம். அடர் நிற சோடாக்கள் உணவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கு வித்திடக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்கள்: சிறுநீரக நோய், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சர்க்கரை அல்லது பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. அவற்றுள் அவகேடோ, ஆப்ரிகாட், கிவி, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் இந்த பழங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வேறு சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். திராட்சை, அன்னாசி, மாம்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் சீரான அளவில் பொட்டாசியம் உள்ளடங்கி இருக்கும். அவற்றை உட்கொள்ளலாம்.
உலர் பழங்கள்: சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை தவித்துவிடுவதும் நல்லது. ஏனெனில் இந்த பழங்களை உலர வைக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவற்றினுள் சர்க்கரை, பொட்டாசியம் போன்ற தாதுக்கள்தான் அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளி கள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை வேகமாக ஜீரணிக்கப்படுவது அவர் களின் உடல்நிலையை பாதிக்கலாம்.
பழச்சாறுகள்: நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறு பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்கின்றன. எனவே வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது. எனினும் அடிக்கடி பருகக்கூடாது. எப்போதாவது ருசிக்கலாம்.
பச்சை இலை காய்கறிகள்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பச்சை இலை காய்கறிகளில் பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை முக்கியமானவை. அவற்றுள் பொட்டாசியத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், அது பிரச்சினையை ஏற்படுத்தும்.மேலும் இந்த காய்கறிகளில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். எனவே இந்த பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
- மருத்துவர்களின் ஆலோனைப்படி தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் சர்க்கரை நோய் உள்ளது.
- டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி பெயர் வித்ய ஜோதி . இவர்களுக்கு மோகித் என்ற 7 வயது மகனும் , விதர்சனா என்ற 4 வயது மகளும் உள்ளார்கள். மோகித் பிறந்த 4 வருடங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே மோகித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் டைப் 1 என சொல்லக்கூடிய சர்க்கரை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வாழ்நாள் முழுவதும் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் இதே சர்க்கரை நோய் உள்ளது. இவர்கள் இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்த வேண்டும். இவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் வகைக்கு அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கி வருகின்றனர்.
ஒரு குழந்தைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்ற வீதம் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மாதம் ஊசிக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.
பனியன் கம்பெனியில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் குழந்தைகளின் மருந்து செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்க முடியாத சூழலில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தோம். ஆனால் டைப் 1 இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. டைப்-2 இன்சுலின் மருந்து மட்டுமே தரப்படுகிறது. எனவே குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோய் வகைக்கு ஏற்ற மருந்துகளை எந்த தடையும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
* இந்திய வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.
* சர்வதேச வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.
எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.
சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.
எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.
கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.
பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
குடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
இவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம்.
நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது கஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீழிரிவு நோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.
முறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
டீ குடிக்கும் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்சினையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்குக் குறைவில்லாமல், சர்க்கரை இல்லாமலே இருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒரேயடியாகவோ அல்லது படிப்படியாகவோ டீயில் சர்க்கரையின் தேவையைக் குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தங்களது ஆய்வு முடிவுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக சர்க்கரை கலந்து டீ குடிக்கும் 64 ஆண்களை ஒரு மாத காலத்துக்கு இதுதொடர்பான ஆய்வுக்கு லண்டன் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தினர்.
ஒரு மாதகால ஆய்வுக்குப் பின்னர், டீயில் சர்க்கரையின் அளவைக் குறைத்த குழுவினர்கள், எவ்வித மாற்றமும் இன்றி டீயை தொடர்ந்து விரும்பிக் குடிப்பது தெரியவந்தது.
அதாவது, ஆராய்ச்சியின் முடிவில், படிப்படியாக சர்க்கரையைக் குறைத்து பயிற்சி செய்த குழுவைச் சேர்ந்தவர்களில் 42 சதவீதத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை நிறுத்தினர். அதேபோன்று, ஒரேயடியாக சர்க்கரையை நிறுத்தி பயிற்சி செய்தவர்களில் 36 சதவீத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை கைவிட்டனர்.
ஆச்சரியமளிக்கும் வகையில், தொடர்ந்து ஒருமாத காலம் டீயில் சர்க்கரை கலந்து குடித்து வந்தவர்களில் 6 சதவீதத்தினரும் அதை ஒதுக்கினர். இதேபோன்று மற்ற வகை பானங்களிலும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு மக்கள் முயற்சிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
சரி, சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?
காபி, டீ மட்டுமின்றி நாம் சாப்பிடும், அருந்தும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களிலும் சர்க்கரை மிகுந்து காணப்படுகிறது.
சர்க்கரையைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பால், பழம், தேன் போன்றவற்றிலிருந்து இயல்பாகக் கிடைப்பது. மற்றொன்று, கரும்புச் சாறு போன்றவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரை.
இதில் இரண்டாவது வகை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நீண்டகால அடிப்படையில் உடலின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவரது உடலுக்குத் தேவையான சர்க்கரை இயல்பாகக் கிடைக்கும்போது, அது செரிக்கப்பட்டு தசைகள் மற்றும் மூளைக்குத் தேவையான சக்தியை அளித்து அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது. ஆனால், செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.
அதாவது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் உயர்ந்து, உடலுக்குச் சோர்வை உண்டாக்குவதுடன், எரிச்சலை ஏற்படுத்தி, மென்மேலும் சர்க்கரை கலந்த உணவு, பானத்தை உட்கொள்வதற்குத் தூண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரின் உடல் எடை அதிகரிப்பதுடன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தற்போதைய சூழலில் இரசாயனமில்லாத உணவுகளே கிடையாது. எல்லாவற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் நிறைந்திருக்கிறது. சுவைக்கு அடிமையாகி, நோய்களை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆலோசனைகள் இங்கே.
நாள் ஒன்றில் மொத்தமாக மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளாமல், ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
முற்றிலுமாக மாவுச்சத்து மிகுந்த உணவை தவிர்த்திடாமல், மாவுச்சத்து குறைவாக உள்ள முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பார்லி, பால், சீஸ், சோயா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நார்ச்சத்துள்ள உணவு, ஜீரணத்தை தாமதப்படுத்துவதால், நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு இருக்காது. கேரட், பீன்ஸ், பார்லி, ப்ரோக்கோலி, பீட்ரூட், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மிகுதியாய் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது.
செயற்கை இனிப்பூக்கிகளை பயன்படுத்தாமல், தேங்காய், வெல்லம் மற்றும் தேன் போன்று இயற்கையாகவே இனிப்பு நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இயற்கையாக கிடைப்பதாயினும், அளவாக பயன்படுத்துவதே சிறந்தது.
அவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் கெனோலா எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
சரியான இடைவெளியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முலைக்கட்டிய பயறுகள், தானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம்.
கெட்சப், சாஸ் போன்ற உணவுகளில் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சர்க்கரை ஒளிந்திருக்கிறது. துரித உணவுகளை தவிர்ப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் கவனம் செலுத்தினாலே போதும் நோய்களை விரட்டி அடிக்கலாம்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.
3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
ஏன் வருகின்றன?
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1. நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை.
2. இரத்தக்குழாயில் அடைப்பினால் கால் / விரல்களுக்கு இரத்த ஓட்டம் குறைவு.
3. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருப்பது.
4. சரியான காலணிகள் இல்லாதிருப்பது அல்லது காலணிகளே இல்லாமல் நடப்பது.
எப்படி தடுப்பது?
1. தினமும் கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. எப்போதும் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்மையான செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.
3. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
4. சிறிய காயம், புண் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
என்ன தீர்வு?
* புண்கள் சிறியதாக, ஆழமின்றி இருந்தால் மருந்து கொண்டும், மருந்து வைத்து கட்டுப்போட்டு ஆற்றலாம்.
* புண்கள் ஆழமாக இருந்தாலோ, ஆழத்தில் உள்ள எலும்பு, தசை நார் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
* புண்கள் பெரிதாக இருந்தால் அவற்றை ஆற்ற பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படலாம்.
* கருப்பாகி விட்ட விரல்களோ, பாதத்தின் பகுதிகளோ அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும்.
P.S. மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி சென்டர்,
பாளையங்கோட்டை