search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "memory loss"

    • மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பு.
    • கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    இரவு பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் முன்கூட்டியே முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இதயம் சார்ந்த நோய்கள், நினைவாற்றல் திறன் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    20 மாதங்கள் தொடந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையான மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.

    அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    `45 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களாக இருந்தால் அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பார்க்கும் வேலையை முக்கியமானதாக கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. வேலைக்காக தொடர்ந்து சுழற்சி முறையில் உடல் இயக்கம் நடைபெற்று கொண்டிருப்பது, மன அழுத்தம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்'' என்கிறார்,

    ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக். இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் ஈஸ்ரோஜெனின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அதனால் முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது.

    மேலும் கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரம் நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    • சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது.
    • போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது

    அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறீர்களா? சின்ன விஷயம் கூட சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறதா? மற்ற வேலைகளுக்கு மத்தியில் திட்டமிட்ட விஷயம் தாமதமாக நினைவுக்கு வருகிறதா? இல்லை மறந்து விடுகிறீர்களா? இதுபோன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்த்தால் மூளையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவை மூளையின் செயல்பாடுகளை பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

    தூக்கமின்மை:

    மூளையின் ஆரோக்கியத்திற்கும், சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது. அதனால் நினைவாற்றல் இழப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்க்க இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.

    உணவுக்கட்டுப்பாடு:

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது மூளையை சேதப்படுத்தும். நினைவாற்றல் திறனை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

    புகைப்பழக்கம்:

    மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான விஷயங்களில் ஒன்று, புகைப்பழக்கம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    மது அருந்துதல்:

    அதிக அளவில் மது அருந்துவது மூளை செல்களை சேதப்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும். ஆல்கஹால் தூக்கத்தில் குறுக்கீடு செய்து, நினைவக கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும்.

    மன அழுத்தம்:

    நாள்பட்ட மன அழுத்தம் மூளையின் நினைவகத்திற்கு முக்கிய பொறுப்பு வகிக்கும் ஹிப்போகாம்பஸை சேதப்படுத்தும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். நினைவாற்றலையும் பாதிக்கும். அதனால் மனஅழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.

    தனிமை:

    மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனிமை வாழ்க்கை வாழ்வதும் மூளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். மனச்சோர்வை அதிகரிக்கச்செய்து நினைவாற்றல் திறனை குறைத்துவிடும். மூளை ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தேவையான தூண்டுதலையும் இழக்க நேரிடும். அதனால் தனிமை வாழ்க்கை முறையை தவிர்த்திடுங்கள்.

    சோம்பேறி வாழ்க்கை முறை:

    நீண்ட காலமாக உடற்பயிற்சியிலோ அல்லது வேறு எந்த உடல் செயல்பாடுகளிலோ ஈடுபடாமல் இருந்தால் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நினைவாற்றல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். ஏனெனில் உடல் செயல் இழந்தால், மூளையையும் பலவீனமாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ளுங்கள்.

    ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
    ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.

    பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

    மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.

    ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.  
    ×