என் மலர்
நீங்கள் தேடியது "Deepavali"
- தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
- பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரவெடியில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பேரியம், சரவெடி ஆகிய இரண்டில் மட்டுமே தீர்ப்பு கூறியிருப்பதாகவும், மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்தினர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான மூலப்பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "ஹேப்பி தீபாவளி" என்று தெரிவித்தனர். காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
- புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.
புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர்.
- கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வருகிறது. பண்டிகை வருவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரில் சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
கூட்ட நெரிசல் இல்லாமல் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய பயணத்தை திட்டமிட்டுள்ளனர். அதன்படி தீபாவளி ரெயில் முன்பதிவு கடந்த 12-ந்தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்ததால் கவுண்டர்களில் கூட்டம் இல்லை.
ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். குடும்பமாக செல்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் எடுத்துள்ளனர். எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, ராமேஸ்வரம், திருச்சி, திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாள் நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கியது. கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் இன்று உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதில் தீவிரமாக இருந்தனர்.
அதிகாலை 5 மணிக்கே எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காத்து நின்றனர். அவர்களுக்கு போலீசாரால் டோக்கன் வழங்கப்பட்டது. 8 மணிக்கு கவுண்டர் திறந்தவுடன் வரிசையில் முதலில் நின்ற ஒருவருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. அடுத்து வந்தவர்களுக்கு ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் வரத்தொடங்கியது.
ஆனாலும் பலர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருப்போர் பட்டியல் நீடித்த போதிலும் டிக்கெட் வாங்கி சென்றனர்.
கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது. 5 நிமிடத்தில் முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டன.
ஆன்லைன் வழியாக பலரும் முன்பதிவு செய்ததால் இடங்கள் உடனே நிரம்பி விட்டன. கோவை, ஈரோடு, சேலம் மார்க்கத்திலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பகல் நேர ரெயில்களில் மட்டுமே இடங்கள் தற்போது காலியாக இருக்கின்றன. ஏ.சி. வகுப்பு இடங்களும் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.
தீபாவளிக்கு இன்னும் 120 நாட்கள் இருப்பதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது டிக்கெட் உறுதியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இன்று மாலைக்குள் காத்திருப்போர் பட்டியல் ரூ.200 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும்.
- தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.
சென்னை:
பண்டிகை காலங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரெயில்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 10-ந் தேதி செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
முன்பெல்லாம் முன்பதிவு தொடங்கும் நாளில் ரெயில் நிலையங்களில் கவுண்டர்களில் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமும் டிக்கெட் எடுத்துக்கொள்ள வசதிகள் வந்துவிட்டதால் ரெயில் நிலையங்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் இல்லை.
இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை, கோவை, மதுரை பாண்டியன் உள்ளிட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் 300-க்கும் மேல் உள்ளது.
நவம்பர் 11-ந் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. நாளையும் டிக்கெட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடும் என்கிறார்கள் ரெயில்வே அதிகாரிகள்.
- தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
- குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்பமாக சென்று கொண்டாடி விட்டு பின்னர் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ரெயில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு செய்யும் வகையில் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் வருகிறது. அதனால் சொந்த ஊர் செல்பவர்கள் வியாழக்கிழமை (9-ந்தேதி) முதல் பயணத்தை தொடங்குவார்கள்.
அந்த அடிப்படையில் அதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் முன்ப திவு மையங்கள் வழியாக தொடங்கின. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்கள் பயணம் என்பதால் இன்று குறைந்த அளவிலேயே டிக்கெட் பதிவானது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேரத்தில் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் செல்வதை தவிர்க்கும் வகையில் இப்போதே பய ணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 11-ந்தேதிக்கு வருகிற 14-ந்தேதியும், தீபாவளிக்கு முதல் நாள் பயணம் செய்ய வருகிற 15-ந்தேதியும் முன்பதிவு நடைபெறும்.
தீபாவளி பண்டிகை முன்பதிவு பெரும்பாலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக வீடுகளில் இருந்தவாறே முன்பதிவு செய்கின்றனர். குறைந்த அளவில் தான் முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணா நகர், தி.நகர், கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தீபாவளி முன்பதிவிற்கான கூட்டம் குறைந்த அளவில் இருந்தது. ஆனாலும் முன்பதிவு செய்ய வந்த பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டனர்.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு செல்ல உறுதியான டிக்கெட் கிடைத்தது. 10 நிமிடங்களில் முக்கிய ரெயில்களின் இடங்கள் நிரம்பின. பின்னர் காத்திருப்போர் பட்டியல் தொடங்கின.
நாளைய முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும். அதைவிட வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் 3, 4 நாட்கள் தாங்கள் செய்து வரும் கடையை மூடி விட்டோ, மாற்று ஏற்பாடு செய்து விட்டோ வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
- இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டம் மந்தாகினி நதிக்கரையில் புந்தேல்கணிட் பகுதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். கடந்த 3 நாட்களாக இங்கு கழுதை சந்தை நடைபெற்றது.
இந்த சந்தையில் சுமார் 15 ஆயிரம் கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ரூ.1000 முதல் ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இந்த கழுதைகளை வாங்கவும், விற்கவும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். நேபாளத்தில் இருந்தும் வியாபாரிகள் கழுதைகளை கொண்டு வந்தனர்.
வியாபாரிகள் பலர் தங்கள் கழுதைகளுக்கு இந்தி நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர். இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது. உயர்ரக கழுதை ஒன்றுக்கு சல்மான்கான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த கழுதை ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்றது. ஷாருக்கான் பெயரிடப்பட்ட கழுதை ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கழுதைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த கழுதை சந்தையில் ரூ.2 கோடி வரை விற்பனையாகி உள்ளது.
வட மாநிலங்களில் கட்டிடப் பணிகளில் செங்கல், மணல், கருங்கற்கள் போன்றவற்றை சுமந்து செல்லவும், சலவை தொழிலுக்கு துணை மூட்டைகளை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே குதிரைகளை விட கழுதை உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக கழுதை சந்தையில் விற்பனை அமோகமாக நடந்தது.
இதுகுறித்து கழுதை சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முன்னாலால் திரிபாதி கூறுகையில், "கழுதை சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு கழுதைக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறோம். இந்த சந்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு படையெடுத்த அவுரங்கசீப்பின் பல குதிரைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. எனவே குதிரைகளுக்கு மாற்றாக அவர் கழுதை வியாபாரிகளை வரவழைத்து சந்தையை தொடங்கினார். அதன் பிறகு கழுதை சந்தை இதுவரை நடந்து வருகிறது" என்றார்.
- பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது.
- சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகாசி :
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது.
- காற்று மாசுவை பொறுத்தமட்டில் சவுகார்பேட்டையில் அதிகளவு பதிவாகி இருந்தது.
சென்னை :
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னை பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த இடங்களில் தீபாவளி தினத்தன்று குறைந்தளவு ஒலி மாசு பெசன்ட்நகரிலும், அதிகளவு ஒலி மாசு திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டது.
பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும் பதிவான ஒலி மாசு, தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை விட மிக அதிக அளவானதாகும்.
காற்று மாசுவை பொறுத்தமட்டில் அன்றைய தினம் பெசன்ட்நகரில் குறைந்தளவும், சவுகார்பேட்டையில் அதிகளவும் இருந்தது பதிவாகி இருந்தது.
பெசன்ட்நகர், தியாகராயநகர் ஆகிய இடங்களில் மிக மோசமான அளவும், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 5 இடங்களில் அபாயகரமான அளவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது. அதன்படி, தீபாவளி தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 இடங்களில் குறைந்தளவு காற்று மாசு பதிவான பெசன்ட்நகரில் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், அதிகளவு காற்று மாசு பதிவான சவுகார்பேட்டையில் 11 மடங்கு அதிகமாகவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.
காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மை, காற்றின் மிகக்குறைந்த வேகம் ஆகிய வானிலை அமைப்பு பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாக அமையவில்லை. இதுவே, சென்னை மாநகர பகுதியில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகமானதற்கு காரணம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
- அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.
தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேரக் கட்டுப்பாட்டை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக்கொண்டே இருந்தனர்.
இது தொடர்பாகவும், பட்டாசு உரிமம் தொடர்பாகவும் சென்னை மாநகர் முழுவதும் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் நேரக் கட்டுப்பாட்டு அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 271 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் தீபாவளி அன்று ரோந்து சென்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 271 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது தவிர அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாகவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 14 பட்டாசு விற்பனை யாளர்கள் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகையால் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் இடைவிடாமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 12 மணி வரையில் தமிழகம் முழுவதும் 284 இடங்களில் பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்ப