என் மலர்
நீங்கள் தேடியது "உடல் நலம்"
- இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல.
- காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது.
முன்பெல்லாம் நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு.
பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது.

காலை உணவு நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய சூழலில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கக் கூடிய மூளையைப் பாதிக்கும் என்கின்றனர் டாக்டர்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்ய காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும்.
இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பாதிக்கச் செய்யும். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.
எத்தகைய திறமையானவர்களாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. தானியங்களை காலை உணவாக சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கலப்பு தானியங்கள் கொண்ட காலை உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.
நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் ஊட்டச்சத்து இது.
காலை எழுந்தவுடன் ஒரு பெரிய டம்ளரில் வெது வெதுப்பான தண்ணீர் பருகுவது உடலின் செரிமான அமைப்பை தூண்டுவதற்கு உதவும். இதன் மூலமாக குடலில் இயக்கங்கள் தூண்டப்பட்டு, அவற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். மேலும் உணவை உட்கொள்வதற்கு குடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
தேவைப்பட்டால் வெது வெதுப்பான தண்ணீரோடு ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது சிறந்தது.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
குளிர் காலம் தொடங்கியதும் பலரும் வழக்கத்தை விட விதவிதமாக ருசிப்பதற்கு விரும்புவார்கள். வெப்பநிலை குறைவதால் தாகம் தணிவதும், குளிர்ச்சியான வானிலைக்கு சூடான, பொரித்த உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு இதமாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. அதேவேளையில் சில உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது குளிர் காலத்தில் உடல் நலனை சீராக பேணுவதற்கு வழிவகை செய்யும்.
குளிர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தில் ஜீரண சக்தி சீராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் குளிர்ந்த பால், குளிர்ந்த ரொட்டி, குளிர்ந்த சாதம், அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், குளிர்ந்த உணவை சாப்பிட்டால் ஜீரண சக்தி பலவீனமடையும். அதனை தவிர்க்க எப்போதும் சூடான, புதிதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள். சூடான சூப் பருகலாம். அவை உடலுக்கு கதகதப்புத்தன்மையை கொடுத்து குளிர்ச்சியில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவிடும்.
ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்த்தல்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
அதிகப்படியான உலர்ந்த உணவுகளை சாப்பிடுதல்
குளிர்காலத்தை வாத காலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பரோட்டா, சப்பாத்தி, பச்சை காய்கறி சாலட்டுகள் போன்ற உலர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் வாதம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அவை உடலை மேலும் உலரச் செய்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உண்ணும் உணவுகளுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அத்துடன் ஈரப்பதமான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
- சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
- சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிரிப்பு உடனடியாக மன நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
சத்தமாக சிரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். சத்தமாக சிரிப்பது நீண்ட ஆயுளுக்கு பெரிதும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.

நேர்மறையான, மகிழ்ச்சியான மன நிலையைப் பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
பின்னர் தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சத்தமாக சிரிப்பது உதரவிதானம் மற்றும் நுரையீரலை செயல்படுத்துகிறது. இது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மனம் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கலகலவென கண்ணில் நீர்வர சிரிப்போம்.
- பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
- டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல.
டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து உட்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படும். அதனை டீயுடன் சேர்த்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

பிஸ்கட்டுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் இருப்பதில்லை. பசியை கட்டுப்படுத்துவது போல் தோன்றினாலும் குறைந்த ஊட்டச்சத்துகளையே உடலுக்கு வழங்கும். டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சிலருக்கு அசிடிட்டி ஏற்படக்கூடும். இந்த பழக்கத்தை தொடர்வது உடல் பருமன், அஜீரணம் போன்ற பாதிப்புகளுக்கு வித்திடும். பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
எண்ணெய் பலகாரம் உட்கொள்ளலாமா?
டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல. டீயில் இருக்கும் டானின், எண்ணெய்யுடன் கலந்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் டீயுடன் உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். டீ அருந்திய பிறகு சிறிது இடைவெளி விட்டு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.
- மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
- மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.
புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட்.
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.
மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?
இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.
ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?
ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.
அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.
புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.
'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?
'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது.
- சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
- இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!
சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.
செய்முறை
* முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
* வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
* பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.
* இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.
* காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.
* இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
* பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.
* வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.
- எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது அதிகமாக இருக்கும்.
- முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
முகத்தை எப்போதும் பளபளப்பாக, அழகாக காட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைதான் மேக்கப். ஆனால் சிலரின் முகத்தில் பருக்கள், துவாரங்கள் இருக்கும். இவை வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் பலருக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். சில பருக்கள் மறைந்தாலும், தழும்புபோல் மாறி கருமையாக காட்சியளிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துமா? என சந்தேகம் எழும், பயமும் இருக்கும். ஆனால் அந்த பருக்களை மறைக்குமாறும், அதற்கு ஏற்றவாறும், அதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாமலும் மேக்கப் போட முடியும் என்கிறார் அழகுகலை நிபுணர் பிரஷாந்தி.
முகத்தில் முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ரேசர் வைத்து முகத்திலிருக்கும் சின்ன சின்ன முடிகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு டோனர் பயன்படுத்த வேண்டும். துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கும், துவாரங்களை மறைப்பதற்கும் டோனர் அவசியம். எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவதும் அதிகமாகவே இருக்கும். முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ப்ரைமர் போட வேண்டும். ப்ரைமருக்கு பின் அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப கரெக்டர் பயன்படுத்த வேண்டும். பின்னர் கண்சீலர் போடலாம். இதனைத்தொடர்ந்து ஃபவுண்டேசன் அப்ளை செய்யலாம். ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து பவுடர் போடவேண்டும். பவுடர் போட்ட பிறகு செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும். இது முடிந்தால் மேக்கப்பில் ஒரு பார்ட் ஓவர்.
தற்போது கண் பகுதிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்கு முதலில் ஐப்ரோவை ஷேப் செய்து, அதனை டார்க்கன் செய்ய வேண்டும். தொடர்ந்து ஐ-ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். ஐ-ஷேடோ நாம் அணிந்திருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பிறகு ஐ-லைனர், காஜல் போட வேண்டும்.
இறுதியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். ஆடை மற்றும் ஐ-ஷேடோவிற்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். மேலும், லிப் லைனரால் நிச்சயம் அவுட்லைன் வரைந்த பின்னரே லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது. குறிப்பாக, இந்த மேக்கப் போட்டு முடித்த பிறகு, முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரம்ப நிலை சர்க்கரை நோயை, யோகா 100% குணமாகும்!
- விடியற்காலை 3-4.30 வரை யோகா பயற்சி செய்வது சிறந்த பலனை தரும்.
உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு.
யோகம் என்றால் என்ன? யோகா என்றால் என்ன?
யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ஜோதிடத்தில் நிறைய யோகங்கள் உள்ளன. யோக கலைகளில் யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். கலப்பிடுதல், ஒன்றோடு ஒன்று இணைவது எனக்கூறலாம். பரமாத்மாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா. அதற்காக செய்யக்கூடிய பயிற்சிகள்தான் யோக பயிற்சிகள். யோகா, உடல்நலம், மனநலத்தை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆத்ம பலம் கொடுக்கும். ஆனால் அதனுடைய இறுதி, இறைநிலையோடு இணைவதுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம்.
யோகா பக்தியுடன் தொடர்புடையதா?
யோகா பக்தியுடன் தொடர்புடையதுதான் என்று முழுமையாக சொல்லமுடியாது. இறைநிலை, யோகம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என சொல்லப்படுவதுண்டு. புறவழிப்பாடு, அகவழிப்பாடு, அகத்துள்ளேயே வழிபாடு என சொல்லப்படுகிறது. இவ்வாறு படிநிலைகள் பல உள்ளன. படிநிலைகள் பலவாக இருந்தாலும், முதல்படி பக்தி. உச்சப்படி ஞானம். இன்று யோகாவில் பெரியநிலைக்கு சென்றவர்கள் பக்திநிலையை மறைக்கிறார்கள். ஒருசிலர் பக்தியில் இருந்து வந்ததுதானே எனக் கூறுகிறார்கள்.
யோகாவிற்கு குருமார்கள் அவசியமா?
உலகில் இருக்கும் அனைத்து வித்தைகளுக்கும் குரு என்பவர் வேண்டும். குருவிடம் கற்றப்பிறகு நீங்கள் தனியாக செய்யலாம். ஆரம்பத்தில் குருவேண்டும்.
மனதை யோகாவால் கட்டுப்படுத்த முடியுமா?
எடுத்தவுடனேயே மனதை கட்டுப்படுத்த முடியாது. அலையும் எண்ணங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. மன அலைச்சுழலை குறைக்கமுடியும். முறையான நீண்ட கால பயிற்சிக்குப்பின் மனதை கட்டுப்படுத்தலாம்.
உடல்நலத்திற்கு யோகா எந்தவிதத்தில் பயனளிக்கிறது?
சில ஆசனங்களை செய்ய வேண்டும். சிசுபால ஆசனம், பட்டர்ஃப்ளை ஆசனம் அவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டு ஆசனங்களையும் தினசரி செய்துவந்தால், முதுகு தண்டுவடம் நன்றாக இருக்கும். ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட சுதர்சன கிரியா மூச்சுப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளலாம். உடலுக்கு நல்லது. இதனை எல்லோரும் செய்யலாம்.
எந்தவிதமான நோய்களை யோகா தடுக்கும்?
சிறுவயதில் இருந்தே ஒருவர் முறையாக யோகா செய்தால் எந்த நோயும் அவருக்கு வரவே வராது. மரணத்தையே வெல்லலாம் என சொல்கிறார்கள். சர்க்கரை, மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்தால், அவை 100% குணமாகும். ஒருவேளை நோய் முற்றி இருந்தால், யோகா பயிற்சியின் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு என்று உள்ள பயிற்சிகளை செய்தால், கண்ணாடியே போடவேண்டாம். ஆனால் அதனை தினமும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் கண்பயிற்சிக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் செய்தாலே கண்ணாடி போட்டிருக்கும் அனைவரும் கண்ணாடியை எடுத்துவிடலாம். அதுபோல உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் யோகாவில் பயிற்சிகள் உள்ளன.
காலை வேளையில்தான் யோகா செய்ய வேண்டுமா?
யோகா, காலையில்தான் செய்யவேண்டும். அதுதான் சிறப்பு. உடற்பயிற்சி காலையில் செய்யவேண்டும். தியானம் விடியற்காலையில் செய்யவேண்டும். அனைவரும் 4.30 - 6 பிரம்மமுகூர்த்தம் சிறந்தது எனக் கூறுவார்கள். ஆனால் அதைவிட சிறந்தது 03 - 4.30 ரிஷிமுகூர்த்தம். அது அமைதியான நேரம். பெரும்பாலும் யாரும் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள். 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 லட்சம் பேர்தான் எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து, கண்ணைமூடி அமர்ந்து, குருமார்கள் எந்த தியானத்தை சொல்லிக் கொடுத்தார்களோ அதை செய்யவேண்டும். ஆரம்பத்தில் அரைமணிநேரம் செய்தாலும், மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு 1 மணிநேரம் தியானம் செய்யவேண்டும். தியானம், உடற்பயிற்சியை ஒரு 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால், நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். நீங்கள் யாரிடமும் எதையும் கேட்கவேண்டிய அவசியமே வராது. தெளிந்த மனநிலை இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் தன்மை நமக்கு வந்துவிடும். தியானத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு யாரும் தியானம் செய்வதில்லை.
- ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
- கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.
சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.
கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை
* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.
* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.
- ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
- ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.
மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.
CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்
முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.
ப்ளெண்ட் செய்யும்போது...
ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.
ஐ-லென்ஸ்
மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஐ-மேக்கப்
அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.
- முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
- தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!
தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
சருமத்திற்கு ஈரப்பதம்...
வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.
சரும பிரகாசம்...
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன
புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நெகிழ்ச்சித்தன்மை
சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.
முகச்சுருக்கங்களை தடுக்கும்
சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.
முகப்பரு
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.
பிற தோல்நோய்கள்
புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.






