என் மலர்
நீங்கள் தேடியது "செரிமானம்"
- தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
- தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.
தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்
தீபாவளி லேகியப்பொடி
வெல்லம்
தேன்
நெய்
இஞ்சி
நல்லெண்ணெய்
செய்முறை
கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.

பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்
தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...
தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது.
- உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது.
- உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.
நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது. இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது.
மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும்.
- எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது.
கோடை டை காலத்தில் பருவதற்கு சிறந்த பானமாக கருதப்படும் இளநீரை குளிர் காலத்திலும் ருசிக்கலாம். ஏனெனில் அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பியுள்ளன. குளிர்கால நிலைக்கு ஏற்ப உடலை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும்உதவுகிறது. குளிர் காலத்தில் ஏன் இளநீர் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
நீரேற்றம்
குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும். கோடை காலத்தை போல தாகத்தை உணர முடியாது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது. இயற்கையாகவே உடல் நீரேற்றமாக இருக்க வழிவகை செய்கிறது.
எலக்ட்ரோலைட்
குளிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நீரிழப்பு ஏற்படும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். இளநீர் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகளை கொண்டது. உடல் செயல்பாடுகளின் போது வியர்வை மூலம் இழக்கப்படும் திரவங்கள் மற்றும் தாதுக்களை நிரப்புவதற்கு இளநீர் சிறந்த தேர்வாக அமையும்.
வெப்பநிலை
குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது முக்கியம். இளநீர் உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள் ளும். குளிர்ந்த ர்ந்த காலநிலையில் உடல் வெப்ப நிலையை சமநிலையில் பேணுவதற்கு வித்திடும்.
ஆற்றல்
இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை குளிர்பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளங்குகின்றன. குளிர்காலங்களில் ஆட்கொள்ளும் சோர்வு மற்றும் சோம்பலை எதிர்த்து போராடும் பணியை இளநீர் மேற்கொள்ளும். உடலுக்கு விரைவான ஆற்றலையும், சக்தியையும் அளிக்கும்.
ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ்) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம்) உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இளநீரில் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும். குளிர் காலங்களில் நோய் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ப உடலுக்கு சக்தியை வழங்கும் பயனுள்ள பணியை இளநீர் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி
சளி மற்றும் காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை தடுக்க வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு அவசியம். இளநீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
செரிமானம்
குளிர்காலத்தில் விரும்பிய உணவுகளை பலரும் அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். பிறகு செரிமான தொந்தரவுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். இளநீர் உணவு துகள்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.






