என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஞ்சராயன்குளம் பறவைகள்"

    • நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. நஞ்சராயன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள சாலை வழியாக இந்தப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி நூற்றுக்கணக்கான மனையிடங்களுடன் கடந்த 30 ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டது.

    4 பிரதான வீதிகளும் 12 குறுக்கு வீதிகளிலும் வீடுகள் அமைந்துள்ளன. இதன் அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகள் பட்டாசு, வெடிகள் ஏற்படுத்தும் அதிக ஒலியால் அச்சமுறும். அதன் இயல்பு பாதிக்கப்படும் என்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தீபாவளியின்போது பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.

    இந்த ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    பறவைகள் நலன் கருதி பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். பறவைகளுக்காக எங்கள் சிறுவர்கள் இதை தியாகம் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நமக்கு நாமே திட்டத்தில் கூடுதல் வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்ற தலைப்பில் கலர்புல் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டிலுள்ள நஞ்சராயன் குளத்தில் தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. அதற்கான பூர்வாங்க பணி துவங்கியுள்ள நிலையில், நமக்கு நாமே திட்டத்தில் கூடுதல் வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் பறவைகள் சரணாலய பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த குளம், வனத்துறை வசம் வந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில் பறவைகள் படங்களுடன் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்ற தலைப்பில் கலர்புல் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் இயற்கை கழகத்தினரால் எடுக்கப்பட்ட பறவைகள் படங்களை வைத்து, வண்ணமயமான காலண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. குளத்தின் மொத்த தோற்றம், 12 வகையான பறவைகள் விவரம் மற்றும் போட்டோக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு பறவை படம், பெயர் மற்றும் பிற விவரங்களை தெரிவிக்கும், க்யூஆர். கோடு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    ×