search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanjarayan kulam"

    • 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி நஞ்சராயன் குளம்.
    • தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே திருப்பூர் மாநகரம் மற்றும் ஊத்துக்குளி வட்டத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நஞ்சராயன் குளம் தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்குளத்தில் 181 பறவை இனங்கள்,40 வகை பட்டாம்பூச்சிகள்,76 வகை தாவரங்கள்,11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழிடமாகவும்,வெளிநாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும்,800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் இயங்கிவருகிறது.40ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது. இந்தநிலையில் நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம்,ஈஸ்வரன்,நட்ராஜ் தாமோதரன்,இரவிச்சந்திரன்,நாகேந்திரன், குமார்,சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தற்போது இந்த குளத்தின் கரையில் இருந்து சாலை வரை ரூ.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் வெறும் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு தனியார் டிரஸ்டிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனம் தற்போது குளக்கரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது.எனவே சட்டப் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் பறையிசை அடித்து துவக்கி வைத்தார். சங்க கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாவட்ட தலைவர் கணேசன் கலை இலக்கிய அறிக்கையை முன் வைத்தார். பண்பாட்டு அறிக்கையை மாநில குழு உறுப்பினர் கோவை சதாசிவம், செயல் அறிக்கையை மாவட்ட செயலாளர் குமார், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன் வைத்தனர். தொடர்ந்து தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் திருப்பூரில், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். கணியாம்பூண்டி முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அகழாய்வு பணியை துவக்க வேண்டும்.

    திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில் நடக்கும் பகுதியில் சிற்பக்கலை பயிற்சி கல்வி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.கொடுமணல் அகழாய்வு நடந்த இடத்தில் கிடைத்த தொல்பொருட்களை ஈரோடு, சென்னிமலை, காங்கயம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும், ஒரு பொருத்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×