search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bird Sanctuary"

    • பறவைகள் சரணாலயத்தில் 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலாபறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க கோடியக்கரைக்கு 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    ரஷ்யா, ஈராக் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை.

    சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம்.உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது.

    பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் பிளம்மிங்கோ (பூநாரை,) பறவைகள் வந்து குவிந்துள்ளன இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன் லார்வா அதிக அளவில் இந்த சரணயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வரத்து ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரை சிறு குஞ்சுகளும் வந்துள்ளன.

    பறவைகளின் நூழைவாயிலாக கருதப்படும் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதிகளில் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ம் ஆண்டு முதல் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியானது அடர்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது.

    இதனால் சாம்பல் நாரை, இராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளிஅலகு கூழைக்கடா போன்ற வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

    இனி வரும் ஆண்டுகளில் பறவைகளின் எண்ணிக்கைஅதிகரித்து இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.

    இதன் தொடர்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று வரை மாவட்ட வன அலுவலர், ஈரோடு வனக்கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. 2018-2019-ம் ஆண்டு முதல் 2019-2020-ம் ஆண்டு வரை சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் நீட்சியாக சரணாலயம் மேலும் பொழிவு பெற்று கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈர்த்தது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 121 இனங்களுக்குட்பட்ட 23,427 பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டது.

    தனித்துவமான ஈரநில வகைகளின் பிரதிநிதி, உயிரியல் பன்முகத்தன்மை, அறிய இனங்களை கொண்டு சுற்றுச்சூழல் சமூகம் மற்றும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவைகளும் வசித்து வரும் ஈரநிலம் என பல காரணங்களால் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரிய குளம் ஏரியானது ஈரநில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலமாக அங்கீகாரம் பெற்று இந்த ஆண்டு அரசால் ராம்சார் அமைப்பிற்கு முன்மொழியப்பட்டது.

    தற்போது ராம்சார் அமைப்பால் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என கடந்த 3-ந் தேதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பானது வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பல வகை உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குவதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

    • தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு திருப்பூரில் நடந்தது.நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் பறையிசை அடித்து துவக்கி வைத்தார். சங்க கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாவட்ட தலைவர் கணேசன் கலை இலக்கிய அறிக்கையை முன் வைத்தார். பண்பாட்டு அறிக்கையை மாநில குழு உறுப்பினர் கோவை சதாசிவம், செயல் அறிக்கையை மாவட்ட செயலாளர் குமார், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன் வைத்தனர். தொடர்ந்து தலா 9நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் திருப்பூரில், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். கணியாம்பூண்டி முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அகழாய்வு பணியை துவக்க வேண்டும்.

    திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில் நடக்கும் பகுதியில் சிற்பக்கலை பயிற்சி கல்வி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.கொடுமணல் அகழாய்வு நடந்த இடத்தில் கிடைத்த தொல்பொருட்களை ஈரோடு, சென்னிமலை, காங்கயம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும், ஒரு பொருத்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்து வைத்து, விவசாயத்திற்கு பயன்படுத்த முற்காலத்தில் ஏழு குள பாசனம் ஏற்படுத்தப்பட்டது.வரிசையாக ஏழு குளங்கள் அமைந்திருக்கும் இப்பாசனத்திட்டத்தில் பெரியகுளத்தின் நீர்த்தேக்க பரப்பு 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருப்பது, சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல், பறவைகளுக்குத்தேவையான மீன், புழுக்கள் உள்ளிட்ட உணவு கிடைப்பதால் பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. குளத்தின் கரை மற்றும் நீர்த்தேக்க பரப்பில் வளர்ந்திருக்கும் பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.

    இதனால் ஆண்டுதோறும் ஏழு குளங்களுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பல்வேறு வகையான உள்நாட்டு பறவைகள் வலசை போதல் நிகழ்வாக ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இப்பகுதியில் தங்கிச்செல்கின்றன. பெரியகுளத்தில், மஞ்சள்மூக்குநாரை, நீர்க்காகம், நத்தைகொத்தி, முக்குளிப்பான், கூழைக்கடா போன்ற பறவையினங்கள் வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இவ்வாறு அரிய வகை பறவையினங்கள் தங்கினாலும், பல்வேறு இடையூறுகள் காரணமாக பறவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இடம் பெயர்ந்து வரும் பறவைகள் குறித்து தெரியாமல், அவற்றை விரட்டும் பணியிலும் பலர் ஈடுபடுகின்றனர்.இதனால் பறவைகளின் இயல்பான சுழற்சி வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் பெரியகுளத்தில், பறவைகள் கூடு கட்டாத சில மரங்களும் அதிகரித்துள்ளன.இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- உள்நாட்டில் இடம் பெயரும் தன்மையுள்ள பறவையினங்கள் ஏராளமாக இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. பறவைகள் இக்குளங்களில் கூடு கட்டி வசிக்கும் வகையில், அவை விரும்பும் மரங்களை குளக்கரையில் நடவு செய்யலாம்.இதனால், குளக்கரைகள் வலுப்படுவதுடன், மரங்களில் பறவைகள் நிரந்தரமாக தங்கும் வாய்ப்புள்ளது.பறவைகள் சரணாலயமாக மாற்றி மேம்படுத்தினால், இயற்கை மீதான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உடுமலை பகுதிகளில, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் பெரியகுளத்தை மேம்படுத்தி நடைபாதை, பூங்கா, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவேற்றினால் சுற்றுலா மையமாக மாறும்.எனவே பல்வேறு வகையான இயற்கை சூழல் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து வனத்துறை வாயிலாக பாதுகாக்க வேண்டும் என்றனர். 

    ×