என் மலர்
நீங்கள் தேடியது "திட்ட பணிகள்"
- சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- அத்தியூர் ஊராட்சியில் திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறுகிறது
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளாட்சி நிதியிலிருந்து ரூ.55.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப் பையன், செல்வகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதத்தூர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒகளூர் அன்பழகன், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், பெண்ணகோணம் ஜெயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, பழனிவேல், ஆண்டாள் குடியரசு , மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் புகழேந்தி, அத்தியூர் கிளைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார்.
புதுப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி, பாரதிதாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களை அலுவலர் ரவி வாசித்தார்.
- கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துகளில் மத்திய மாநில அரசு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக பெரியாம்பட்டி முதல் நிலை பஞ்சாயத்தில் சமத்துவ புர சீரமைப்பு பணிகள், பூலாபட்டி சாலையில் சமுதாயக்கூடம் மற்றும் பூங்கா பணிகள், தொகுப்பு வீடு ஆகியவற்றையும் பைசுஅள்ளி பஞ்சாயத்தில் வேளாண்மை துறை சார்பில் நடந்த ஏரி தூர் வாரும் பணி, திண்டல் பஞ்சாயத்தில் பூந்தோட்டம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடந்து வரும் எரிவாயு தகனமேடை மற்றும் காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், உமா குப்புராஜ் செயற்பொறியாளர்கள் முருகன், அன்பழகன், செயலாளர்கள் முருகன், குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி, மார்ச்.14-
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சி, வி.எம்.சி. காலனியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடத்தையும், புல்லலக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 மூலம் ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருள் மீட்டு வசதி கட்டிடத்தையும், விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் மின் மயானத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மதுரை 4-வது மண்டல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
- அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வு ெய்தனர்.
41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
- பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள்.
- கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
தருமபுரி,
தருமபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை என்கிற புவனேஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 36 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தருமபுரி நகரில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 8 திட்டப்பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜாதி ரவி பேசுகையில், நகராட்சி கவுன்சிலர்களின் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைக்காமல் விழா நடத்துகிறார்கள்.
அந்தந்த பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கு நகராட்சி கவுன்சிலர்களை முறையாக அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதேபோன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள். கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் நகராட்சி மேலாளர் சண்முகம், கணக்கு அலுவலர் முத்துக்குமார், நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் மாதையன், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், சீனிவாசலு மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அருகே ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் தேவாமங்கலம் கிராமத்தில் ரூ.58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.44 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வ.உ.சி.நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வடுகனேரி வாரியில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மொனவூர், மேல்மொனவூர், தெள்ளூர், அத்தியூர், ஊசூர், பூதூர், போன்ற ஊராட்சிகளில் புதிய திட்டங்களை தொடங்கவும் மேலும் பணிகளை நிறைவடைந்துள்ள புதிய கட்டிடங்களையும், கட்டி முடிக்கப்பட்ட மேல் நீர் தேக்க தொட்டி திறப்பு விழாவும் நேற்று ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளும் தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் பி.டி.ஓ. வின்சென்ட் ரமேஷ் பாபு, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.






