search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project works"

    • துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் சிமெண்ட் ரோடு, வாருகால் ஆகிய திட்டப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.99 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் ரோடு, வாருகால், ஊரணி புணரமைப்பு, மயானக்கூடம் ஆகிய திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஏசுதாஸ், முனியராஜ், துரைச்சாமியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, கிளை செயலாளர்கள் வேல்பாண்டியன், கண்ணன், உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல். ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன் தொடங்கி வைத்தனர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியில் ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் தலைமை யில் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி கலந்து கொண்டு கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் கிரிசமுத்திரம் ஊராட்சியில் முதல் அமைச்சர் கிராம புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் கிரிச முத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, சம்பந்திகுப்பம், புருஷோத்த குப்பம் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் சித்ரா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிர பாகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
    • புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் தரிசு நிலங்களில் செம்மை நெல் சாகுபடி எந்திரம் மூலம் நடைபெற்று வரும் நடவு பணிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்யப் பட்டுள்ள கரும்புகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகள், ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2,500 மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் சோளம் இடு பொருட்கள், பண்ணை கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.அங்கு சேதமடைந்த கட்டி டங்களை புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். 

    • 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம்,ரேஷன் கடை, சிமெண்ட் சாலை, தார் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன், ஊராட்சி செயலாளர் வேலவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், வேணு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி பழனிவேல் நன்றி கூறினார்.

    • ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு, ஒக்கரைப்பட்டி, மொட்டனூத்து மற்றும் பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மரிக்குண்டு ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட மும் முடிவுற்ற பணியினை யும், வீருசின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமான பணியினையும், மொட்ட னூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்தி ட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணியினையும்,

    ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புனர மைத்தல் பணியினையும், நீரார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவியர்கள் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும்,

    கொப்பையம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், பிச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக் கால்வாய் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பாள்ளி யில் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். வளர்ச்சித்திட்ட ப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தி னார்.

    • விஜயராமபுரத்தில் ரூ.42.6 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
    • இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் தச்சமொழி ஊராட்சி விஜயராமபுரத்தில் ரூ.42.6 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா, பண்டாரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13.16 லட்சம் மதிப்பில் ரேசன் கடை அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதுக்குளம் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர்கள் தச்சமொழி பிரேம்குமார், பண்டாரபுரம் பாலசிங், புதுக்குளம் பாலமேனன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், நகர தலைவர் வேணுகோபால், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சாத்தான்குளம் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, பிரபு, ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    • 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் வெங்கிட்டாபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், மற்றும் நாசுவம்பாளையம் அருகே உள்ள சுகாதார வளாகம் கட்டுதல், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலக முன்பகுதி தரைத்தளத்திற்க்கு பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அமைக்கப்படும் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், அதிமுக., தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அகலப்படுத்த கோரிக்கை

    மாநகர பகுதியில் தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பாளை மத்திய சிறையில் இருந்து ரெட்டியார்பட்டி விலக்கு வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக 22 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரா வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்தை கடந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் கடக்கும் பகுதியில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சாலைகள் அளவுக்கு ஏற்ப இந்த பாலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் பஸ்கள் வேகமாக வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதனால் இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், விபத்தை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் மண் பரிசோதனை செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ஆகும் செலவு குறித்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றி நடுவில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.80 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டது.

    பணிகள் தொடக்கம்

    அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் தற்போது சாலைகள் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாளையங்கல்வாயை இருபுறமும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    பைபாஸ் சாலை சுமார் 20 மீட்டர் அகலத்திலும், நடுவில் சென்டர் மீடியன் அமைக்க கூடுதல் இடமும் ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் பேட்டி

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலையில் விபத்தை குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி இருந்தோம். அதன்படி முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சிறிய பாலங்கள் மற்றும் பாளையங்கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும். முதல் கட்டமாக வடக்கு பைபாசில் ரெயில்வே மேம்பாலத்திற்கு அடுத்ததாக இந்த அகலமான நான்கு வழிச்சாலை ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரையிலும் நான்கு வழிச்சாலையாகவே அமைக்கப்படுகிறது.

    நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் அகலத்தில் சாலைகள் இருக்கும். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சிக்னல் பகுதியில் ரவுண்டானா ஏதும் அமைக்கப்படவில்லை. அங்கும் நான்கு வழிச்சாலை தான் அமைக்கப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.

    ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி

    இந்த பணிகள் முடிந்த பின்னரே தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் வண்ணார்பேட்டை பாளையங்கால்வாய் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்துவதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே சார்பில் ஒப்புதல் கிடைத்ததும் அந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தும் பணி தொடங்கும். தற்போது கணக்கீட்டின்படி 5.8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. செல்லப் பாண்டியன் மேம்பாலம் அதே நிலையிலேயே நான்கு வழி சாலை மேம்பாலமாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இது தவிர சாலைகளின் நடுவில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் தச்சநல்லூர் ஆற்று பாலத்துக்கு அருகே வடபகுதியில் புதிதாக ஒரு ஆற்றுப் பாலம் கட்டப்பட உள்ளது. அவை இரண்டும் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை போலவே ஒரு வழிப்பாதைகளாக செயல்படும்.

    இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, ஜோத்தியம்பட்டி ஊராட்சி, கொக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் நந்த வனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார். காங்கேயம் வட்டம் ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி வெங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டடத்தினையும், வெங்கிபாளையத்தில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீ ழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் ஜோத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், என மொத்தம் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    சூரிய நல்லூர் ஊராட்சி, வெங்கிபாளையம் நால்ரோடு பகுதியில் கலைஞர்மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியும், காங்கேயம் வட்டம், ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ்குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • அணைக்கட்டு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மொனவூர், மேல்மொனவூர், தெள்ளூர், அத்தியூர், ஊசூர், பூதூர், போன்ற ஊராட்சிகளில் புதிய திட்டங்களை தொடங்கவும் மேலும் பணிகளை நிறைவடைந்துள்ள புதிய கட்டிடங்களையும், கட்டி முடிக்கப்பட்ட மேல் நீர் தேக்க தொட்டி திறப்பு விழாவும் நேற்று ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளும் தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் பி.டி.ஓ. வின்சென்ட் ரமேஷ் பாபு, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    தென்திருப்பேரை:

    முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் கேம்பலாபாத்தில் ரூ.38.14 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார். மேலும் தேமாங்குளம் ஊராட்சி மானாட்டூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்களும், நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பால்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் பெற்று கொண்டு ஆவன செய்து கொடுப்பதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஶ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் மோகன் ராஜ், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இசை சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், கேமலாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா ஷர்மிளா, துணைத்தலைவரும், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. பொருளாளருமான ஹாஜா உதுமான், ஆழ்வை மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசாருதீன், கிளை பிரதிநிதி சிந்தா பகர்தீன், ஜமாத் தலைவர் அப்துல் காதர், காண்டிராக்டர் சைமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×