search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanmugaiah MLA"

    • ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
    • இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பசுவந்தனை-ஓசனூத்து-எஸ்.கைலாச புரம் வரையிலான சாலையை விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப் படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், உதவி பொறி யாளர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி, உதவி பொறியாளர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஊராட்சி செயலர் செல்வன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, தி.மு.க. தொண்டரணி கோபால், கிளை செயலாளர்கள் பாலமுருகன், நிறையபூபதி, சண்முகம், கிளை பிரதிநிதி, சமுத்திரவேல் மற்றும் நிர்வாகிகள் அழகுராஜ், கருப்பசாமி, சண்முகநாதன்,ஆட்டோ கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் அருகே தருவைக்குளம் - வெள்ள பட்டி சாலையில் மழைக்கா லங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூ றாக இருந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என்று சண்முகையா எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், உதவி பொறியா ளர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மாரி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட கவுன்சி லர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆலோ சனை மரியான், ஒட்டப்பிடா ரம் ஊராட்சி தலைவர் இளையராஜா, அவைத் தலைவர் சுப்ரமணியன், இளைஞரணி அணிட்டன், தருவைக்குளம் ஊராட்சி தலைவர் காடோடி, கீழ அரசடி ஊராட்சி தலைவர் ராயப்பன், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானபிரகாசம், தயாளன், கிளை பிரதிநிதி பிரஸ்நேவ், மகளிரணி அன்னசெல்வம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

    • மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரும், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கனகரத்திமணி வரவேற்று பேசினார்.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், முத்துமாலை, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், இளைஞர் அணி ராஜேந்திரன், பாரி, கிளைச்செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மேரிகீதா நன்றி கூறினார்.

    • மாதாநகர் ரேஷன்கடை உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி. சவேரியார்புரம் பள்ளி, பெரிய செல்வன் நகரில் உள்ள ஊராட்சி சேவை மையம் மகளிர் சுய உதவிக்குழு அங்காடி, மாதாநகர் ரேஷன்கடை ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பொது மக்களின் பதிவு செய்யும் முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது சம்பந்தப்பட்ட அலுவல ர்களிடம் வருகிற மக்களை முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின் போது மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளர் சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட மகளிர் தொ ண்டரணி அமை ப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்ம லிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உமாமகேஸ்வரி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், தி.மு.க. இளைஞர் அணி ராஜேந்திரன், கிளைச் செய லாளர்கள் பொன்னுச்சாமி, சந்திரசேகர், மற்றும் கவுதம், ராயப்பன், கப்பிக்குளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • சவலாபேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சண்முகையா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, கலப்பை பட்டி ஆதிய பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் பாலம் அமைத்தல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க விழா நடைபெற்றது.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் (கிராம ஊராட்சி), உதவி பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், வி.ஏ.ஓ. கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகசுந்தரி தங்கராஜ், கீழக்கோட்டை சதீஷ்குமார், கொடியங்குளம் அருண்குமார், கிளை செயலாளர் முருகன், கோமதி, மாவட்ட நலக்குழு உறுப்பினர் பெரியதுரை, பிரதிநிதி ஜோசப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் கே. கைலாசுபுரம் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் மதிய உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து புளி யம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து புளியம்பட்டியை அடுத்துள்ள சவலாபேரி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 55 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

    • ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
    • பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் எட்டயபுரம் சாலை முதல் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதி வரை சுமார் 2.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

    சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடக்கு சோட்டையன் தோப்பில் நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவண குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரியப்பன், இளைஞரணி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆர். ஆஸ்கர் வரவேற்று பேசினார். பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் திருமணி ஆனந்த், காளிதாசன், மாரிச்செல்வம், கார்த்தி, ரூபன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, சித்திரை புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டி

    கொரோனா காலக்க ட்டத்தில் 4 ஆயிரம் உதவித் தொகை, பால்விலை குறைப்பு, இலவச பஸ் பயணம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், கல்வி உதவித்தொகை, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப் பளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் செந்தூர்பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கோட்டாளம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், அனஸ், பாலமுருகன், வக்கீல் அணி ரகுராமன், ஸ்பிக்நகர் பகுதி நிர்வாகிகள் வெள்ளைபாண்டி, அந்தோணிகுரூஸ், கல்பனா, ரகு, காளி, ஆனந்த், விவேகானந்தன், வட்ட செயலாளர் வசந்தி பால்பாண்டியன், பாஸ்கர், முத்துமாணிக்கம், அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொல்லங்கிணறு ஊராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, உயர்நிலை பள்ளியில் பெண்கள் கழிவறை, மந்திகுளம் ஊரணியில் தடுப்புச்சுவர், வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.
    • ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.

    ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்காக, ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டுரை,பேச்சு, இசை ,ஓவியம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகளை குத்துவிளக்கு ஏற்ற வைத்து மகிழ்ந்தார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ -மாணவிகள் கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று முயற்சி செய்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெறும் அளவிற்கு முயற்சி ெசய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஓட்டப் பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா தேவி, சண்முகராஜ், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வ நாயகம், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்தி ஈஸ்வரன், சரஸ்வதி, மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டன

    ×