என் மலர்

    நீங்கள் தேடியது "development projects"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
    • பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதாக பேட்டி

    ஊட்டி, 

    சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் கரன்சி அங்கன்வாடிமைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் பர்லியார் ரேஷன் கடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கரன்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிச்சோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் சோலாடாமட்டம் சாலைப்பணிகள், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நூலக சீரமைப்பு பணி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி கிணறு, எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என ரூ.1.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.

    பேரட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி சமையல்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்-அப் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் அங்கு படிக்கும் 1-5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி, ஊராட்சியின் பல்வேறு பகு திகளில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.குன்னூர் தாலுகா, உலிக்கல் பேரூராட்சி மற்றும் மேலூர், உபதலை, பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் வளர்ச்சித்தி ட்டப்பணிகளை ஆய்வு செய்து அங்கு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை பார்வை யிட்டோம்.குன்னூர் அடுத்த பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மோகனகு மாரமங்கலம், ஆறுமுகம், பர்லியார் ஊராட்சி தலைவி சுசீலா, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட செட்டியபட்டி யில் தமிழ்நாடு நக ர்ப்புற மேம்பாட்டு த்திட்டத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, போளியம்ம னூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி, திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்ப ட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருமலைரா யபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிக்கு இன்னும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

    கருணாநிதி முதலமை ச்சராக இருந்தபோது, போளி யம்மனூரில் முதன்முறை யாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்குத் தேவையான கல்வி வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. முதல்-அமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10,000 கி.மீட்டர் துாரம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.180 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப்புறங்களில் மின் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நான் கூட்டுற வுத்துறை அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் 7000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் தகுதியின் அடிப்படையில் 180 பணி நியமனங்கள் மே ற்கொ ள்ளப்பட்டு, காலிப்பணி யிடங்கள் பூர்த்தி செய்ய ப்பட்டன. சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 2 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும், ரூ.30.14 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்ட பணிகள் குறித்தும், ரூ.177.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுது போக்கு வசதிகள் செய்யும் பணிகள் குறித்தும், 54.36 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கப்பணிகள் குறித்தும், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மேம்படுத்துதல் பணிகள் குறித்து என மொத்தம் ரூ.299.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
    • மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு மண்டலம் 8-வது வார்டில் தாகூர் நகர், ஆர்.ஆர்.நகர், கம்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 8-வது வார்டு சந்தானம் நகர் மெயின் தெருக்கள், 11-வது வார்டு ஜி.ஆர்.நகர் 5, 6-வது தெருக்க ளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள தார் சாலை பணிகள், சந்தானம் நகர் உள் தெருக்கள், மெயின் கிழக்கு தெருக்களில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள தார் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி மெயின் சாலையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி செயற்பொறி யாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேச பாண்டியன், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர் கலெக்டர அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், தமிழ்நாடு ஊரக கிராம சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீா் விநியோகம், வடிகால், தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிடம், நியாய விலைக் கடை, சமுதாய நலக்கூடம், தொகுப்பு வீடுகள், பேருந்து மற்றும் நிழற்குடை, பள்ளிக் கட்டடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, மயானம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, திருப்பூா் மற்றும் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊத்துக்குளி மற்றம் குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பி்னனர் கலெக்டர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் தொடர்பாகவும்இ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும்இ நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகஇ தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அன்னியேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிக்குளம் பகுதியில் ரூ.3060 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டும் பணிகள் தொடர்பாகவும், ரூ.1686.37 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணிகளை, சிவகங்கையில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் அங்குள்ள நடைபெற்ற ஏலம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணி, ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் மறவமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஊரணி, மேலமருங்கூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆகியன தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காரைக்குடியில் நகராட்சிஇ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள்இ மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணிகளையும்இ கழனிவாசலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநிலக்கோட்டம்) பாரதிதாசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • சவலாபேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சண்முகையா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, கலப்பை பட்டி ஆதிய பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் பாலம் அமைத்தல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க விழா நடைபெற்றது.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் (கிராம ஊராட்சி), உதவி பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், வி.ஏ.ஓ. கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகசுந்தரி தங்கராஜ், கீழக்கோட்டை சதீஷ்குமார், கொடியங்குளம் அருண்குமார், கிளை செயலாளர் முருகன், கோமதி, மாவட்ட நலக்குழு உறுப்பினர் பெரியதுரை, பிரதிநிதி ஜோசப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் கே. கைலாசுபுரம் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் மதிய உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து புளி யம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து புளியம்பட்டியை அடுத்துள்ள சவலாபேரி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 55 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய துறைமுகம் வரை செல்லும் தமிழ் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணல் திட்டுகள் மற்றும் கற்களை அகற்றும் பணியினை மாநகர கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலையில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முன்னதாக மாலையில் தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் கமிஷனர், தலைமை சுகாதார அதிகாரி, சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,தூய்மைக் காவலர்கள், கண்கானிப்பாளர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போல்பேட்டை பிரதான சாலையினை அகலப்படுத்தும் பணி நிறைவுற்றுள்ளது. அதனை அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு வரை நீட்டித்து முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது நடைபெற்று வருகின்ற சாலை அகலப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகளினால் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மாநகரின் 60 வார்டுகளிலும் முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைப்பிடிக்கும் விதமாக எட்டையாபுரம் போல்பேட்டை 60-வது அடி சாலைப்பகுதியில் மாசு தூசி படியாத வகையில் கால்வாய் ஒட்டிய பகுதிகளில் குறிப்பிட்ட அளவிற்கு புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு அமெரிக்கன் மருத்துவமனை 4 வழித்தட முகப்பு வரை பதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை கொண்டு வரும் வகையில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணியை 60 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன்,முத்துவேல் முன்னாள் கவுன்சிலர் ரவிந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜாஸ்பர், வட்டச்செயலாளர் முனியசாமி, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கி னார். பின்னர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ கூறியதா வது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை ஆகிய வற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வும் வலியுறுத்தி உள்ளேன்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி னார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை தனது தந்தை பெயரில் கட்டப்பட்ட நூல கத்தை அவர் திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம் முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இப்போது 210 கோடி என அறி விக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக மதுரை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு களை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது.

    மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்தது. பல்வேறு நிதிகளை திரட்டி நிர்வாக திறனுடன் நிர்வா கத்தை செயல் படுத்தினோம். தற்போது இருக்கும் மேயர் மீது குற்றம்சாட்டவில்லை நிதியை பெற முயல வேண்டுெமன கூறுகிறேன்.நாளை மதுரை வரும் மு.க. ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல் நடக்கிறது.
    • தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல் மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    அடிக்கல் நாட்டுவிழா

    அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், ஆறுமுகநேரி பேருராட்சியில் மடத்துவிளை மற்றும் ராஜமன்னார்புரத்தில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு, காலை 10.30-க்கு ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு எதிர்புறம் உள்ள குப்பை கிடங்கை பார்வையிடுதல், காலை 10.45-க்கு காயல்பட்டினம் நகராட்சி அரசு மருத்துவமனையில் ரூ.62 கோடி மதிப்பு விரிவாக்க பணிகள் மற்றும் புதியசாலை பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல், புதிய பஸ் நிலையம் அருகில் 2350 எல்.இ.டி.விளக்கு அமைக்கும் பணி மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை தொடங்கி வைக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக