வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.பணியினை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. 
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. 
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னே ற்றம் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித்துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

தொடர்ந்து வேளா ண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,

சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம்,

பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்; மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன்,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித் துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் விரி வாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட த்தின் அனைத்து பகுதிக ளிலும் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் திட்ட ங்கள் அனைத்தும் அனை த்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் தங்களது பணி யினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கலெகக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் (வளர்ச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,

துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோம சுந்தரம், கீழ்பவானி வடிநில கோட்டம் செயற்பொ றியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரகாஷ்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com