search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளா்ச்சி  திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
    X

    வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

    • வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சோ்க்கும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் இத்தகையை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள், தூய்மைப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, ஆா்.கோவிந்தராஜ், சி.கோவிந்தசாமி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

    Next Story
    ×