என் மலர்

    நீங்கள் தேடியது "officials"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
    • மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுச்சேரி:

    காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-

    ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.

    ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

    காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

    காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.

    அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
    • அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில் ஆய்வு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சான்று பெற்ற நெல் விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மேலும் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்–பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் தாராபுரத்தில் சில நெல் விதை நிலையங்களில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அதில் விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு உள்ள விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பராமரிக்கப்படாத சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 லட்சத்து 66 ஆயிரத்து 730 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்–பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச்சட்டம்-1966, விதை விதிகள்- 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின்படி விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முக பிரியா ராஜேஸ் தலைமை யில் நடந்தது. ஆணையாளர் ஜானகி முன்னிலை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி கள்) தேவபிரியா வரவேற்றார். இதில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் சசிகலா (கருமல்),செல்வி (மேலகன்னிசேரி), கலைச் செல்வி (விளங்குளத்தூர்), முருகன் (செல்வநாயகபுரம்), அரிச்சுணன் (வளநாடு) ஆகியோர் கவுன்சில் நிதி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும். சாலை யோரம் உள்ள முள்செடி களை வெட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கால குறிச்சி கிராமத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும், வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் காலனி பகுதி, கீழ கன்னி சேரி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    விளங்குளத்தூர் பகுதி யில் இருந்து பருக்கைக்குடி செல்லும் தார்ச்சாலை பழுத டைந்துள்ளதை மரா மத்து செய்ய வேண்டும். பருக்கைக்குடி கிராமத்தில் 2 படித்துறை கட்ட வேண் டும். வெண்ணீர் வாய்க்கால். கிராமத்தில் சுடுகாடு வரை சாலை அமைக்க வேண்டும்.கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள்.

    இதில் 205 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 83 பேர் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

    பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ரெயிலில் பயணம் செய்து மாயமாகி உள்ளவர்களை உறவினர்கள், பிணவறையில் உள்ள உடல்களை பார்த்து தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் பலியானவர்கள் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரபாஸ் ரஞ்சன் திரிபாதி கூறும்போது, 'சிறந்த முறையில் எம்பாமிங்கை 6 முதல் 12 மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும். இறந்த பிறகு 12 மணி நேரத்துக்கும் மேலாக எம்பாமிங் செய்தாலும் அதற்கு பலன் இல்லை. மேலும் உடல்கள் சேதமடைந்துள்ளதால் எம்பாமிங் செய்வது மிகவும் கடினம்' என்றார்.

    இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பலியானவர்களின் உடல்களில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் பொருத்தி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    பலியானவர்களின் உடல்கள் குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உடல்கள் மோசமாக சிதைந்துள்ள நிலையில் அடையாளம் காண முடியாததால் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுபோதையில் வாகனத்தை இயக்குவது.
    • நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:- சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா். இதனடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.ஆகவே சாலை விபத்து தொடா்பாக போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்தில்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

    இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா்ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும்.
    • சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரணக்கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துகுமார் வரவேற்றார். தொடர்ந்து மன்ற பொருள்களை கணக்கர் சரவணன் வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதங்கள் வருமாறு,உறுப்பினர் பஞ்சு குமார்(திமுக) பேசுகையில், மணிக்கிராமம் ஊராட்சியில் சாலைக்கார தெரு, பள்ளி கூட தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    உறுப்பினர் நடராஜன் (அதிமுக) பேசுகையில் 15வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மங்கைமடம்கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

    உறுப்பினர் விஜயகுமார்(அதிமுக) பேசுகையில், சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும். புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உறுப்பினர் தென்னரசு (திமுக) பேசுகையில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மற்றும் மண் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். ரேஷன் கடைகள் வாரம் முழுவதும் பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

    குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி :

    ஊராட்சிகளில் அனுமதி இன்றி பலர் குடிநீர் இணைப்புகளை பெற்று குடிநீரை வீணாக்கி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவே அனுமதி பெறாமல் இணைப்பு பெற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உறுப்பினர் நிலவழகி பேசுகையில், எனது பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

    கீழமூவர்கரை பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றார்.

    தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசுகையில் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதி செய்யவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர்விநியோகப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, 6நகராட்சிகள் 15 பேரூராட்சிகள் 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டுத்திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகார்களின் அடிப்படையில்உடனடியாக நேரில் களஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதிசெய்யவேண்டும். பழுது ஏற்படும் போது உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கவேண்டும்.

    பொதுமக்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில் பழுது நீக்க பணிகள் மற்றும் பழைய மோட்டார்களை அகற்றி புதியமோட்டார்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டிற்குள் அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவினை உறுதி செய்துஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும்அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் பெறப்படும் குடிநீர் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்து,குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் இணைந்து தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவைகண்காணித்து இனிவரும் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கமுறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தினந்தோறும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளில்விநியோகிக்கப்படும் குடிநீர்அளவினை மின்னணு நீர்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொறுப்பு ) ஜெகதீஸன், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி) வாணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறி யாளர்கள் செல்வராணி, சசிக்குமார், விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2 பேர் பலியாகினா்.
    • 4 குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

    திருப்பூர் :

    தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2பேர் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக முழுவதும் சட்டவிரோதமாக செயல்படுகிற பாா்கள் மற்றும் போலி மது விற்பனை செய்கிற பாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனா்.

    திருப்பூா் மாவட்டத்திலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சோ்ந்த அதிகாரிகள் என 4 குழுவினா் பிரிந்து சென்று அவிநாசி, தாராபுரம், காங்கேயம், திருப்பூா் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பாா்களில் விற்பனை செய்யப்படுகிற மது வகைகள் மற்றும் பாா்கள் சட்டப்படியும், விதிகளுக்கு உள்பட்டும் இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதிகாரிகள் சோதனைகளுக்கு வருவது அறிந்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாா்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் திரும்பி வந்தனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 குழுக்களாக சென்று சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பாா்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். இதில் 30 பாா்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பல்வேறு பகுதிகளில் பாா்கள் திறக்கப்படவில்லை. இந்த பாா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாா்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.