search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officials"

    • லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக 2 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன.

    அப்போது அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுவதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளன.

    யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த அதிபர் ஒருவரின் வீட்டில் அப்போது சோதனை நடத்தப்பட்டு யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு முதல் கட்ட விசாரணை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள னர். 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

    குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் கட்டுமான அதிபர்களான உதயகுமார், சுனில், கெத்பாலியா, மணீஸ் ஆகிய 3 பேரின் வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பின்னிமில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கிய போது ஆக்கிரப்பாளர்களை காலி செய்வதற்காகவே ரூ.50 கோடி லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்பது பற்றிய பட்டியலையும் இணைத்து உள்ளனர்.

    இதன் படி முன்னாள் எம்.பி. ஒருவர் ரூ.23 லட்சம் லஞ்சமாக பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு எம்.பி.க்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.33 லட்சமும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கு ரூ.2 லட்சமும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.40 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி என யார்-யாருக்கு எந்தெந்த வழிகளில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி லஞ்சப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
    • விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 8 மணி முதல் வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

    இன்று மதியம் 12 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
    • குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

    இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

    தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள். அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
    • காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.

    தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

    மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.

    எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.

    இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.

    டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.

    இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
    • இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு புதுச்சேரி ரெயின்போ நகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள 64,000 சதுரடி நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து நிலம் கிரயம் செய் யப்பட்ட காலகட்டமான 2021-ல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவைத் துறையின் இயக்குனராக இருந்த ரமேஷ், சார் பதிவாளர் சிவசாமி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சொத்தினை தனது குடும்பத்தினருக்கு வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தி.மு.க., - காங்., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    காமாட்சியம்மன் கோவில் சொத்துகளை பொருத்தவரை, ஜான்குமார் எம்.எல்.ஏ., குடும்பத்தினர் 4 பேர் உள்பட மொத்தம் 22 பேர் வாங்கி இருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் வாங்கிய கோவில் இடங்களை யாரும் ஒப்படைக்கவில்லை.இதனையடுத்து கலெக்டர் வல்லவன் உத் தரவின்பேரில் காமாட்சி யம்மன் கோவில் சொத்துகளை கையகப் படுத்தி, இந்து அறநிலையத் துறை முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதற்கிடையே காமாட்சியம்மன் கோவில் சொத்து தொடர்பான வழக்கு, கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப் போது, கோவில் சொத்து விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களுடன், இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச் சேரி சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காமாட்சியம்மன் கோவில் சொத்து சம்பந்தமாக இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பில் மேலும் உழவர்கரை தாசில்தாரர்களாக பணியாற்றிய மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. அந்த அதிகாரிகள் தற்போது தேர்தல் பணி மற்றும் வருவாய்த்துறை அலுவலக பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • புதுவை கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்த
    • உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    புதுச்சேரி:

    உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    மாநாட்டில் புதுவை அரங்கினை திறந்து வைத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆசிய நாட்டு பிரதிநிதிகளுடன் புதுவையின் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்து வது குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற 2- ம் நாள் கண்காட்சியில் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை வர்த்தக செயலாளர் பிரபாகர், பொருளாதார வர்த்தக செயலாளர் ஜோஷி ஆகியோர் புதுவை அரங்கினை பார்வையிட்டனர். அவர்களிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துரையாடினார்.

    அப்போது புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்கள், கலை, கலாச்சாரம் மற்றும் கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்கான விரைவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும் அடுத்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் புதுவை சுற்றுலா திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவது ஆகஸ்டு மாதம் நடைபெறும் சிங்கப்பூர் தேசிய தினத்தில் பார்வையாளர்களுக்கு புதுவை சுற்றுலா கையேட்டினை விநியோ கிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.

    • தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

    • ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
    • மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுச்சேரி:

    காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-

    ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.

    ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

    காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

    காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.

    அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.

    • சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
    • அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×