search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிக வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம் - அதிகாரி பேச்சு
    X

    கோப்புபடம்.

    வணிக வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம் - அதிகாரி பேச்சு

    • சட்ட விதிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.
    • ஆண்டு வரி கணக்குகளை உரிய காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தி யாளர் சங்க(சைமா) அரங்கில் நடந்த பின்ன லாடை துறையினர் சந்திப்பு கூட்டத்தில் வணிக வரித்து றை துணை கமிஷனர் முருக குமார் பேசியதாவது:- அதிகாரிகளானாலும் தொழில்முனை வோரா னாலும் சட்ட விதிமுறை களை கடைபிடித்துதான் ஆகவேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள், மாதா ந்திர ஆண்டு வரி கணக்கு களை உரிய காலத்து க்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    ஆடிட்டர்கள் கவனித்து க்கொண்டாலும்கூட, நிறுவன உரிமையாளர்களும், வரி சார்ந்த அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையை பெறுபவர் மட்டுமின்றி அதனை வழங்குபவரும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவேண்டும். ஒரு தரப்பினர் கணக்கு தாக்கல் செய்யவில்லை யெ ன்றாலும், அது தொடர்பில் உள்ள மற்ற வருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, முறையாக ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வோருடன் மட்டும் வர்த்தக தொடர்புவைத்துக் கொள்ளவேண்டும். கணக்கு தாக்கல் செய்யாதது, முரண்பாடு உட்பட பல்வேறு காரண ங்களுக்காக வணிக வரித்து றையிலிருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம்.

    நோட்டீஸ் அனுப்ப ப்பட்டால் உங்கள் நிறு வனம் சார்ந்த ஆடிட்ட ர்களிடம் வழங்கியோ அல்லது வணிக வரித்துறை அலு வலகத்தை அணுகியோ தெரிவித்து விளக்கம் பெ றலாம். நோட்டீ ஸ்களுக்கு உரிய காலத்து க்குள் சரியான பதில் அளிக்கவேண்டும். கால நீட்டிப்பு கேட்டுப் பெற லாம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×