search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl marriage"

    • சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி 2 வீட்டு பெற்றோரும் பேசி முடிவெடுத்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்வது என்றும், நேற்று திருமணம் நடத்தலாம் எனவும் முடிவு செய்தனர்.

    இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை 2 வீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 17 வயதிலேயே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக, காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலரான அமராவதிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் யாசர், காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அமராவதி, குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா ஆகியோர் திருணம் நடைபெறுவதாக வந்த திருமண மண்படத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு சிறுமிக்கும், வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.

    உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அதனை தடுத்து நிறுத்தினர்.

    தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது. அதற்குள் எப்படி திருமணம் செய்யலாம். 18 வயது முடிந்த பிறகே திருமணம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளதாகவும், சிறுமிக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் இது போன்று செய்யக்கூடாது என 2 வீட்டு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி சென்றனர்.

    • சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
    • சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (23). இவர் கடந்த 1 1/2 ஆண்டாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மன்னா வீதியில் தங்கி கட்டிடம் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வருகிறார். புகழேந்திரனின் உறவினரின் 15 வயது மகள் ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமியின் தாயார் குமாரபாளையம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி குமாரபாளையம் அழைத்து வந்து புகழேந்திரன் கட்டாய திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதற்கு சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை செய்து புகழேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
    • சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சமூக நலத்துறை அதிகாரி சாந்தி என்பவருக்கு காரிமங்கலம் ஊர்கவுண்டர் கொட்டாய் என்ற இடத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு விசாரணை மேற்கொண்ட பெண் அதிகாரி சம்பவம் உறுதியானதை அடுத்து அது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

    அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை மாதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 27) என்பவருக்கும் பண்ணத்தூர் தேவிர அள்ளி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மகளிர் சமூக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் பிரகாஷ் சிறுமியின் தந்தை, சிறுமியின் தாய் மற்றும் மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா, நஞ்சம்மாள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனையடுத்து சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
    • நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மனைவி சுஜாதா (45). இவர்களுக்கு 16 வயது, 14 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வசித்து வருகிறார்.

    சுஜாதா தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவருக்கு தனது 16 வயது மகளை கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மாங்காடு கோவில் வாசலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இதுகுறித்து 16 வயது சிறுமியின் உறவினர் 1098 சைல்டு லைன் எண் மூலம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் போலீசார் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மற்றும் சிறுமியின் தாய் சுஜாதா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற பெற்றோர் முடிவு செய்தனர்.
    • கடந்த ஜூன் 29-ந்தேதி நடைபெற்ற திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர்.

    அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி, தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

    மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த பெற்றோர் டேனியல் மார்ஷலின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஜூன் 29-ந்தேதி நடைபெற்ற இத்திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற 12 நாட்களில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்து போனார்.

    • குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
    • குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

    வேப்பந்தட்டை:

    இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது மகளை 35 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் காளி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இந்த தம்பதியரின் 16 வயது சிறுமிக்கு சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (35) என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி உற்றார் உறவினர்கள் புடை சூழ தடபுடலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை மோப்பம் பிடித்துக்கொண்டு சக்திவேல் சிறுமியுடன் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலின சமமின்மை காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையும் சிறிது காலத்திலேயே கசந்து போகிறது. மேலும் குழந்தை திருமணத்தால் சிறுமிகளுக்கு பிரசவத்தின்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

    • அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது.
    • 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். சிறுமியின் முகவரி மற்றும் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர்.

    அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த பெரியசாமி-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் மாரிமுத்து (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது. அதிகாரிகள் விசாரித்தபோது மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு அறைக்கு சென்று விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி கூறினர்.

    இதையடுத்து உறவினர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். மேலும் அதிகாரிகள் விசாரித்தபோது மாரிமுத்து, சிறுமியின் சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும், இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்தது.

    அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்தில் சேர்த்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் வாலிபரின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 11-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகு தியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசாப் பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்திருமணம் நடைபெற இருந்தது,

    விழுப்புரம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் திருமணம் நடை பெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக் குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடை பெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்சதை தடுத்து நிறுத்தினர அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது.

    மரக்காணம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    • சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.

    இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

    சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    • வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • மாணவிக்கும் வாலிபருக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார்.

    இந்த நிலையில் வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடந்ததாக திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×