என் மலர்

    நீங்கள் தேடியது "girl marriage"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 11-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகு தியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசாப் பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்திருமணம் நடைபெற இருந்தது,

    விழுப்புரம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் திருமணம் நடை பெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக் குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடை பெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்சதை தடுத்து நிறுத்தினர அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது.

    மரக்காணம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.

    இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

    சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • மாணவிக்கும் வாலிபருக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார்.

    இந்த நிலையில் வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடந்ததாக திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
    • சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் கணபதி(வயது 22). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2 பேரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 2 பேரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
    • அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32 ). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தண்டபாணி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி உள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தண்டபாணி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது குறித்து அந்த சிறுமிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அவர் கூறினார்.

    இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தண்டபாணியை பிடித்து விசாரித்த போது சிறுமிக்கு 16 வயதே ஆவது தெரியவந்தது.

    இதை அடுத்து தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராம் என்கிற தில்லை நாகரத்தின தீட்சிதர். அவரது மகன் பத்ரிசன், (வயது 19).

    இவருக்கும், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும் சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. சிறுமி தற்போது, 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதுகுறித்து குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், பத்ரிசன், இவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 6 பேர் தில்லைநாகரத்தினம் தீட்சிதர், பத்ரிசன் சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜகணேசன் தீட்சிதர், சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து உள்ளனர்.

    இவர்களில் சூர்யா தீட்சிதரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo