என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO law"

    • மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

    ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
    • குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.

    இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
    • சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை சம்பவத்தன்று 2 வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

    பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்பு அந்த வாலிபர்கள் இருவரும் சிறுமியை அந்த இடத்திலேயே தவிக்க விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதையடுத்து தனது வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மானந்தவாடி பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் ஜெயராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கொடுத்து பள்ளி மாணவியை சீரழித்த 2 பேரின் மீதும் போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    பழங்குடியின சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.

    மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தங்கவேல் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் பிடித்து விசாரித்து வரும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

    • வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் சரவணன் (வயது 19). இவர் டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்லும் போது உடன் வந்த 15 வயதுடைய பிளஸ்-1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். அதன் பின்னர் கடந்த வாரம் பள்ளிக்கு வந்த மாணவியை பஸ் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்றார். செம்பட்டி, மதுரை, வேளாங்கன்னி என பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அதன் பிறகு திருச்சிக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார். இதனிடையே தனது மகளை காணாமல் பெற்றோர் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவியை சரவணன் கடத்திச் சென்றது உறுதியானது. இதனையடுத்து திருச்சிக்கு சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் அழைத்து வந்தனர்.

    பின்னர் இந்த வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் பள்ளி மாணவியை கடத்திய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

    • மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
    • காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் ஒரு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.

    ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது உடையவர்கள்.

    மாநகர காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
    • வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.

    • சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர்.
    • சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியில் கடந்த 24-ந் தேதி மற்ற பகுதிகளை போலவே தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சாய் (வயது 27) சிறுமியை அவரது வீட்டிற்கு தூக்கி சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர். ஆனால் சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

    அப்போதுதான் குடும்பத்தினருக்கு சிறுமி காணவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கினர்.

    சிறுமியை தேடிக்கொண்டிருந்த அவரது பெற்றோர் சாய் வீட்டருகில் வந்துள்ளனர். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டது.

    கதவை தட்டிய பெற்றோர் சாய் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது சாய் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது தொடர்பாக சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர்.

    சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.

    இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

    சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ×