என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது
- ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
- குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






