என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher Arrest"

    • மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

    ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
    • காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).

    இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.

    பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

    மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.

    முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
    • இதனை தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியர் சிம்காஸ், என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார்.

    தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படும் நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் ஒரே மகன் ஸ்ரீராம், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலை வீட்டின் அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலைக்கான காரணத்தை அவர் கடித்ததில் எழுதியுள்ளார். அதில், பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்துகொண்டு என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஸ்ரீராம் தன் கைப்பட அதில் எழுதியுள்ளார்.

    இதன்காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    • ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
    • நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.

    சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.

    ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
    • 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    சேலம்:

    தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    • அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தற்காப்பு கலை பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, சுற்றுலா வரக்கூடிய வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள்.

    அதேபோன்று கண்ணூர் டவுன் அருகே செயல்பட்டு வரும் பாரம்பரிய கலைகள் கற்பித்து கொடுக்கும் மையம் ஒன்றுக்கு களரி பயிற்சி பெறுவதற்காக 43 வயது மதிக்கத்தக்க அமெரிக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். அந்த மையத்தை கண்ணூர் மாவட்டம் தோட்டா பகுதியை சேர்ந்த சுஜித்(வயது53) என்பவர் நடத்தி வந்திருக்கிறார்.

    அந்த மையத்தில் களரி பயிற்சி ஆசிரியராகவும் சுஜித் செயல்பட்டுள்ளார். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார். இதனை பயன்படுத்தி அமெரிக்க பெண்ணை சுஜித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண், கண்ணூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், களரி ஆசிரியர் சுஜித்தை கைது செய்தனர். இவர் இதுபோன்று பயிற்சிக்கு வந்த வேறு பெண்களிடமும் தவறாக நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்பு சுஜித்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த அமெரிக்க பெண்ணை பயிற்சி மையத்தின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை தகாத முறையில் தொடுவதை மற்றொரு ஆசிரியர் கண்டுபிடித்ததையடுத்து பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    'குட் டச், பேட் டச்' குறித்து தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாற்றினார். அப்போது மாணவர்களுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து கற்பிக்கப்பட்டது. அப்போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் ஈடுபட்டதை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரியலூர்:

    அரியலூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜீவ் காந்தி (வயது 41). இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • பெருமாளை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அரிமளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

    • 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
    • ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது.

    இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.

    சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×