என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "teacher arrest"
- கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
- 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
சேலம்:
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
- ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.
இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.
ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
- நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
- ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.
இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது.
இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.
சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சமூக அறிவியல் ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் (வயது 50) என்பவர் வகுப்பறையில் வைத்து சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த மாணவர் பள்ளி விடுதியில் வைத்து பிளேடால் தனது இடதுகையில் அறுத்துக் கொண்டார்.
இதையடுத்து மற்ற மாணவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது சம்பந்தமாக மாணவரின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவர் கையை அறுத்துக் கொண்டது உண்மை என தெரியவந்தது.
மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை கைது செய்த போது நெஞ்சுவலியால் திடீரென அவர் மயங்கினார். உடனே அவரை போலீசார் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் அரசு உயர் நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறுமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை மாணவ- மாணவிகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடந்தது. அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணன் (வயது 35) பேசி கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் சிறுமதுரை பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அந்த பள்ளிக்குள் புகுந்தனர். மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடக்க முயன்றதாக கூறி அந்த வாலிபர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அந்த ஆசிரியரை பள்ளியின் ஒரு அறையில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கிருஷ்ணனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். அவர்களை வெளியில் செல்ல விடாமல் பள்ளி முன்பு திரண்டு நின்ற பொதுமக்கள் பள்ளியின் நுழைவு வாசலை பூட்டினர். பின்னர் போலீஸ் வாகனங்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பொது மக்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் போராட்டக்காரர்கள் கூறும்போது, பள்ளியில் இருந்து ஆசிரியரை கைது செய்து விலங்கு மாட்டிதான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வேனில் ஏற்றி செல்லக்கூடாது என்றனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அதன் பின்னர் இந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வழி விடுங்கள். உங்களது போராட்டத்தையும் கைவிடுங்கள் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை இரவு 11 மணிக்கு கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த மாணவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
கர்நாடக மாநிலம் சவதத்தி தாலுகா கடபி சவாபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜீலிகாபீ மமதாபூர் (வயது 25) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ ‘பாகிஸ்தான் கி ஜெய்ஹோ’ என்று பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த அந்த கிராம மக்கள் அவருடைய வீட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், அவருடைய வீட்டு மீது கல்வீசிய அவர்கள் வீட்டு வாசலில் தீவைத்தனர். இதனால் வாசலின் முன் பகுதி தீப்பற்றி எரிந்தது. இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த முருகோடு போலீசார் தீயை அணைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர்.
இந்த விசாரணையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ பதிவு செய் ததை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து முருகோடு போலீசார் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோகம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ஜீலிகாபீ மமதாபூர் வீட்டுக்கு தீவைத்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது பற்றியும் முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JelakaMamadapur #PulwamaAttack
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் தெருவை சேர்ந்தவர் விமல துரைநாதன் (வயது 40). இவரது மனைவி பியூலா (36) இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். மேலும் கணவன்- மனைவி 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏல சீட்டு உள்பட பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தனர்.
இவர்களிடம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் ஆகிய சீட்டுகளில் சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் முதலில் சீட்டு முடிந்து சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்த இவர்கள் பின்னர் சரியாக சீட்டு பணம் கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விமலதுரை நாதனும் அவரது மனைவி பியூலாவும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம்வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விமலதுரை நாதன், பியூலா ஆகிய இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் மரக்காணத்தில் இருந்து பியூலா வெளியூருக்கு தப்பி செல்ல போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பியூலாவை கைது செய்தனர்.
பின்னர் பியூலாவை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விமலதுரை நாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
செங்கம் கண்ணக்குருக்கை அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த கண்ணன் (46) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் கண்ணன், பாலியல் தொல்லை கொடுத்ததாக 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் தரப்பில் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பள்ளிக்குள் புகுந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கினர். இதில் ஆசிரியர் பலத்தகாயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவி கொடுத்த புகாரின் பேரில் ‘போக்சோ’, பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, தீண்டாமை உள்பட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கண்ணனை கைது செய்தனர்.
மேலும், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் பாய்ச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மாணவியின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியரை தாக்கியவர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர்.
மேல்நாச்சிப்பட்டு அடுத்த வடமாத்தூரை சேர்ந்த கும்பல் தான் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கும்பல் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிப்பட்ட காரணங்களால் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. ஆசிரியரை தாக்கிய புகாரில் முதற்கட்டமாக 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2-வது நாளாக இன்றும் பதட்டமான சூழல் நீடிக்கிறது. பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கை முறையே 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜ்குமார் முத்துப் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி (பா.ஜனதா) திரிவேந்திரசிங் ரவத் தலைநகர் டேராடூனில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அப்போது அவரை வயதான பெண் ஆசிரியை தனக்கு இடமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகள் கேட்டு வாக்கு வாதம் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தும் தொடர்ந்து முதல்- மந்திரியிடம் கோபத்தில் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். #TrivendraSinghRawat
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்