என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
- அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்:
அரியலூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜீவ் காந்தி (வயது 41). இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






