search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth arrested"

    • முருகன் என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
    • மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்ட சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.

    அதன்பேரில் டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து டேனியல் சுந்தர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில், சென்னை, கொராட்டூர், பாலாஜி நகர், காமக்குடி தெருவை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போல பேசி கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட் களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது.
    • நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அபிசேக், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் ஆகியோர் இன்று ஜங்சன் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அந்த ரெயிலில் ஏறி இறங்கினர். அப்போது முன்பதிவு பெட்டியில் இருந்து இறங்கிய ஒரு நபர் கையில் பெரிய பையுடன் வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை மடக்கி பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது. ஆனால் அந்த நபரிடம் அதற்கான ரசீது எதுவும் இல்லை.

    அதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்( வயது 25) என்பது தெரியவந்தது.

    நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடந்து வருகிறது.

    அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வருமான வரித்துறை மற்றும் வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று பணம் மற்றும் நகையை மதிப்பிட்டு வருகின்றனர்.

    இதில் ரொக்க பணம் ரூ. 15 லட்சமும், ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 2.45 கிலோ தங்க நகைகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். கைப்பற்றப்பட்ட நகை, பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார்.
    • இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜேஷ். இவருடைய மனைவி அஸ்வதி (வயது30), ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் மாலையில் சேங்கோட்டு கோணம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கிவிட்டு கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பறித்த வேகத்தில் தங்க சங்கிலி பல துண்டுகளாக அறுந்தது.

    உடனே அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார். அந்த நபர் அஸ்வதியை இழுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். ஆனால் அஸ்வதி தனது பிடியை விடாமல் அந்த நபரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து போட்டார்.

    இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். இதற்கிடையே அந்த நபர் கையில் கிடைத்த தங்க சங்கிலி துண்டை வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவரது வாயில் இருந்து நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து கழக்கூட்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்த அனில்குமார் (40) என்பதும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருவனந்தபுரம் வஞ்சியூரில் இருந்து திருடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நகை பறித்த நபரை பெண் என்ஜினீயர் மோட்டார் சைக்கிளில் இருந்து பிடித்து கீழே தள்ளிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பகுதிகளில் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னை கிழக்குகடற்கரை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டபோது பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.

    மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தம் பெட்டமைனை பதுக்கி வைத்து வாட்ஸ் அப் குழு மூலம் ராகுல் என்பவர் விற்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். அவர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து கைதான ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் பழக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. இது குறித்து வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்தத் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பிரதீப் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை திருடிய நபர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் மகன் மதன்ராஜ் (வயது28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன 10 மணி நேரத்தில் சரக்கு வாகனத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.

    மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஏழுமலை, மணிகண்டன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட்டம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை, 

    கோவை பீளமேடு சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் பிடிக்க முயன்றவர்களை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியின் 2 அரை பவுன் செயினை பறித்த வெள்ளலூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
    • இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண்.

    இவருக்கும், அவரது ஊரின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் வீடுகள், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இளம்பெண் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது உறவினர்கள் பார்த்து இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரிடம் இவ்வளவு நாள் எங்கு சென்றாய் என விசாரித்தனர். அப்போது இளம்பெண் தன்னை பல நபர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

    இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.

    கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

    அவர் இளம்பெண்ணிடம் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வேண்டுமானால் வந்து விடு என தெரிவித்துள்ளார். இதனை இளம்பெண்ணும் நம்பி அவருடன் சென்றார்.

    இதையடுத்து சிவனேஷ்பாபு இளம்பெண்ணுக்கு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார். பின்னர் வெளியில் செல்வதாக கூறி விட்டு, சென்ற போது அந்த வீட்டின் கதவையும் பூட்டி சென்று விட்டார். இதனால் இளம்பெண்ணுக்கு பயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிவனேஷ்பாபு, வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடன் மற்றொரு வாலிபரும் வந்திருந்தார்.

    அவர் யார் என்று கேட்டபோது, தனது நண்பர் என்றும், அவரது பெயர் ராகுல் என்றும் மெக்கானிக்காக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    சிறிது நேரம் பெண்ணிடம் பேசி கொண்டிருந்த நபர்கள், திடீரென அவரிடம் தவறாக நடக்க முயன்றனர்.

    அதிர்ச்சியான இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 பேரும் இளம்பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். தொடர்ந்து இதுபோன்று வீட்டிற்குள் அடைத்து வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.

    மேலும் இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணிடம் தாங்கள் கூறும் நபர்களுடன் நீ உல்லாசம் அனுபவிக்க வேண்டும்.

    இல்லையொன்றால் கொன்று விடுவதாக மிரட்டிஉள்ளனர். அவர் மறுக்கவே அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டி பல்வேறு நபர்களுக்கும் இளம்பெண்ணை விருந்தாக்கி உள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும், பல நபர்களுடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்களது தொல்லைகள் அதிகரிக்கவே இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும், சிவனேஷ் பாபு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    மேலும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • பெருந்துறை போலீசார் செல்வகணேசை கைது செய்தனர்.

    பெருந்துறை:

    சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவருக்கும் பெருந்துறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வகணேசை கைது செய்தனர்.

    • குடி போதையில் பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசாரை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி விஜயா (வயது 45). சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (27) என்பவர் குடி போதையில் தகராறு செய்து தாக்க முன் வந்தார்.

    இதை தடுக்க வந்த அவரது மகன் பிரேம் குமாரையும் கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த விஜயா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சேதுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் பெரியமாமாட்டு பஸ் நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இளங்கோவிற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
    • தலைமறைவாக உள்ள வாலிபரின் தந்தை, பெரியப்பாக்கள், சித்தப்பா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு ரெயில் மூலம் சென்று வரும்போது, திருத்தணி அடுத்த குடிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் இளங்கோ (வயது 30) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துவிட்டு இளங்கோ பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இளங்கோவிற்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இளங்கோ மற்றும் அவரது பெற்றோர்களிடம் இளம்பெண் மற்றும் அவரது தந்தை கேட்டதற்கு ஆடி மாதம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக இளங்கோ குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இளங்கோவிற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி இளங்கோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள இளங்கோவின் தந்தை நாகரத்தினம், பெரியப்பாக்கள் சக்கரபாணி, கிருஷ்ணமூர்த்தி, சித்தப்பா சஞ்சீவி ஜெயராம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×