என் மலர்
நீங்கள் தேடியது "youth arrested"
- சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார்.
- பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சென்னை:
சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தினமும் வெளியூர்களுக்கு ஏராளமான பயணிகள் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கருதி பஸ்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி பயணியின் நகைகள் இருந்த பையை வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆவடியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி சுவர்ணத்தாய். ஆசிரியை. இவர்கள் இருவரும் திருச்சி துறையூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டனர். வாடகை காரில் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு வந்த இருவரும் பஸ்நிலையத்தில் 6-வது நடைமேடையில் துறையூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் இருக்கையின் பின்புறம் 3- வது இருக்கையில் இடம் பிடித்த கணவன் - மனைவி இருவரும் சீட்டின் மேலே பைகளை வைக்கக்கூடிய இடத்தில் தங்களது பையை வைத்து விட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது வடிவேல் மனைவியை இருக்கையில் அமரவைத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார். இது பற்றி மனைவியிடம் கேட்டபோது அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்த இருவரும் பஸ் நிலையத்தினுள் செயல்பட்டு வரும் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ்நிலையத்துக்கு ஓடிச்சென்று புகார் அளித்தனர். வடிவேலு எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரை பெற்று போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர்.
பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது துறையூர் பஸ்சில் இருந்து வடிவேல்-சுவர்ணத்தாய் தம்பதியினரின் பையை தூக்கிக்கொண்டு வாலிபர் ஒருவர் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து திருட்டு வாலிபர் தப்பிச்சென்ற வழித்தடம் வழியாக போலீசார் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் வடபழனி வரை ஆட்டோவில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி கிண்டி கத்திப்பாராவில் போய் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் ரமேஸ்கண்ணா, உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கத்திப்பாரா பகுதியில் நின்றுகொண்டிருந்த வெளியூர் செல்லும் பஸ்களில் ஏறி சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறி திருட்டு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சுந்தரலிங்கம் என்பது தெரியவந்தது. தேவகோட்டையை சேர்ந்த இவரிடமிருந்து நகை பையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 14 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் நகை பை இருந்த பெரிய பையை தூக்கிசென்ற வாலிபர் சுந்தரலிங்கம் நகை பையை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிய பையை தூக்கி வீசி இருக்கிறார். பின்னர் தனது சட்டையையும் மாற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் பின் தொடர்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். நேற்று இரவு 10 மணி அளவில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி 12 மணி அளவில் குற்றவாளியை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உயர் அதிகாரிகள் தனிப்படை போலீசாரை பாராட்டினர்.
- துலாம்பூண்டி கிராமத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிரா மத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோ விலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது. புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோ விலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தம் பின்புறம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த துலாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய திருக்கோவிலூரைச் சேர்ந்த தர்மா மற்றும் மாயக் கண்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- சின்னராசு ,சக்கரவர்த்தி ஆகியோர் விக்ரம் என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). அதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தியும் அதே ஊரில் உள்ள பெருமாள் நாயக்கர் வீதி யைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர். அப்போது கையும் களவுமாக சின்னரா சாவை பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சின்னராசுவை கைது செய்தனர். தப்பிவிட்ட சக்கரவர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லி க்குப்பம் வைடிப்பாக்கம் பகுதியில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெ க்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை போலீஸ் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலனியை சேர்ந்தவர் சித்தார்த் (வயது 23) என தெரிய வந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தார்த்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- விடுதிக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அதே தெருவில் உள்ள ஆண்கள் விடுதிக்குள் செல்வது தெரிந்தது.
- கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அங்கு பதுங்கி இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டேனியல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
முகப்பேரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான இளம்பெண்கள் தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் விடுதியில் தங்கி உள்ள பெண்கள் அறைக்கதவை பூட்டி விட்டு தூங்கினர். இந்த நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் வாலிபர் ஒருவர் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அறையின் ஜன்னல் வழியாக புகுந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் எழுந்தபோது அருகில் மர்ம வாலிபர் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் விடுதிக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அதே தெருவில் உள்ள ஆண்கள் விடுதிக்குள் செல்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அங்கு பதுங்கி இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டேனியல் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்து திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையின் போது அவர் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து டேனியலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அத்துமீறி நுழைதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- பாரதிதாசனின் மனைவி புவனிகிரி போலீசில் புகார் செய்தார்.
- புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண், அதே பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன்(37). இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பாரதிதாசனின் மனைவி இதுகுறித்து புவனிகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலிசார் அந்த பெண்ணையும், பாரதிதாசனையும் அழைத்து இருவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று பாரதிதாசன் அந்த பெண் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் பாரதிதாசன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்கி மானபங்கம் படுத்தியுள்ளார். இதை தடுக்க வந்த பெண்ணின் கணவர் நிர்மல்ராஜையும் பாரதிதாசன் தாக்கி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் புவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.
- திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர்.
- சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அரசு டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டத்திற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்த நாளில் கேரளாவில் மீண்டும் டாக்டர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அதன்விபரம் வருமாறு:-
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர். அங்கு சுதீர் என்ற வாலிபர் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறிய சுதீர் திடீரென அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி டாக்டர்கள் இருவரும் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில், டாக்டர்களை தாக்கிய சுதீரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
- கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
- பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் குழந்தையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டார்.
அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஊர் பொது மக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவன் கஞ்சா போதையில் இருந்ததால் அவனது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிறுகளால் கைகளை கட்டி சிறைபிடித்தனர்.
பின்னர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (22) என்பதும் இவர் அப்பகுதியில் எந்நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகவும் அந்தக் குழந்தையின் பாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும் கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
தற்போது குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசார் விக்கி என்ற விக்னேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ரூ.1,500 பணத்துக்காக போதை வாலிபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தார். அந்த மூதாட்டி சாலையோரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர். அவர் யார்? அவரது சொந்த ஊர் எது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கஞ்சா மற்றும் மது போதையில் இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதற்காகவும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து சென்று நகை பறிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
- போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது பாளையம் புதூரில் தருமபுரி போக்குவரத்து துறை டிக்கெட் பரிசோதகர் சண்முகம் என்பவர் திடீரென்று வண்டியில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது வண்டியில் திடீரென்று புகையிலை வாசனை வந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகளின் பைகளை அவர் சோதனையிட்டார். அதில் ஒரு பையில் சுமார் 20 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா போன்ற அரசு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அந்த பையை கோவை செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த மோகன் (வயது32) என்பவர் பெங்களூருவில்இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கையும்களவுமாக சண்முகம் பிடித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி சென்ற மோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பயணி போல் நடித்து குட்கா பொருட்களை கடத்தி சென்ற விவகாரம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்.
- கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி வண்ணாம்பாளையம் பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, கரும்பு காட்டுக்குள் பாவாயி (வயது 70) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்தார். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்பவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். 2 மூதாட்டிகளும் தனியாக வசித்து வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 சம்பவமும் ஒரே மாதிரியாக இருந்ததால், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் 2 மூதாட்டிகளையும் கொடூரமாக கொலை செய்தது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் போதையில் இருக்கும் செல்வம் சைக்கோ போல் சுற்றித்திரிந்துள்ளார். காட்டு வேலைக்கு மட்டும் செல்வார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஓடப்பள்ளி பகுதி பக்கமாக சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் சந்தேகிக்காதபடி எப்போதும்போல் காட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இதையடுத்து, கடந்த 12-ந் தேதி அண்ணாநகர் அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த பழனியம்மாளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது காதில் இருந்த தங்க தோட்டை திருடி சென்று விட்டார்.
இது தொடர்பாக செல்வத்தை தேடி வந்தோம். அவனிடம் செல்போன் இல்லை, இதனால் கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று செல்வத்தை கைது செய்தோம்.
கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான செல்வத்தை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.