என் மலர்
நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர் கைது"
- குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
- கைதான வாலிபர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி, கடநத 12-ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அந்த வடமாநில வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு தேடிவந்தனர். அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் பகதூர் பிஸ்வாகர்மா என்கிற ராஜீ பிஸ்வாகர்மா (வயது35) என்ற வாலிபரை கடந்த 25-ந்தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 26-ந்தேதி- திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் போலீசார் ராஜீ பிஸ்வாகர்மாவை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, 15-நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர் ராஜீ பிஸ்வாகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நிலையில், ஆகஸ்ட் 2-ந்தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராஜீ பிஸ்வாகர்மாவை சம்பவ இடமான மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான்.
- கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான். கடந்த 12-ந்தேதி சனிக்கிழமையும் விடுமுறை எடுத்துவிட்டு சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.
அந்த நேரத்தில் தான் அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். மேலும் அவன், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மா பேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் இன்று காலை கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவனை வேனில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கலாம் என்று கருதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே வட மாநில வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட விவரங்களையோ போலீசார் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வாலிபரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. அது அந்த வாலிபர்தானா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு இன்று காலையிலேயே 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.
- வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வடமாநில வாலிபர் சிறுமி வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குற்றவாளியை கண்டுபிடிக்க அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் பொது இடங்களில் போஸ்டராக ஓட்டினர். குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி எனவும் போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை சம்பவத்தில் தொடர்புடைய மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே கைது செய்தனர். அந்த நபரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்து உள்ளார். வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை) அந்த வாலிபர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது.
அந்த வாலிபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பாக்கத்தில் வைத்து விசாரித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
அந்த வடமாநில வாலிபரிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வாலிபரை மகிளா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
- இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.
- ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
- கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.
வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.பில் அறை எடுத்து தங்கியிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கே.ஜி.எப்.பிற்கு விரைந்து சென்றனர்.
ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில் அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆரிப் என தெரியவந்துள்ளது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு தங்கியிருந்த கும்பல் போலீசார் நெருங்கியதை அறிந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏ.டி.எம். கொள்ளையில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் உதவியவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என்றனர்.
- போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
- அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசி:
அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
- அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் செவந்தாம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை சென்று பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவில் அலுவலக அறையில் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 12 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது.
இது குறித்து உடனடியாக அவர் நல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கேரகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.அங்குள்ள ஜீவாநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வடமாநில வாலிபரின் உருவத்தை வைத்து அங்கு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு கோவிலை பூட்டி விட்டு சென்றதும் கோவிலுக்குள் புகுந்த அந்த நபர் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மற்றும் அலுவலக அறையில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடியதுடன் அதனை வீட்டிற்கு எடுத்து சென்ற அவர், அதனை மூட்டை கட்டி வீட்டின் கழிப்பறையின் மேல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் நகை மற்றும் பொருட்களை மீட்டனர். தொடர்ந்து அந்த நபர் வேறு ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






