search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது
    X

    குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது

    • சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    Next Story
    ×