என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை"

    • நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி பெயரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்தமெய்யப்பன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் போலிமாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த குடோன்களில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே டெல்லி மற்றும் ஆந்திராவிலும் போலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசார் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

    நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஆந்திரா மற்றும் டெல்லி போலீசாரும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மேலும் 8 குடோன்களில் போலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அந்த குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர்.
    • பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது.

    அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீர்காழியை சேர்ந்த ரானா, காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் என தெரியவந்தது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 பேரையும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர். அப்போது கதவுகள் மூடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொழிற்சாலைக்கு வந்த டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் போலி மருந்து தொழிற்சாலை மற்றும் குடோன்களை சோதனையிட்டு போலி மருந்துகளை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தார்.

    அதேபோல் 4 குடோன்களில் இருந்த பல கோடி மதிப்புள்ள போலி மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்தனர்.

    • ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.
    • கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, பாறை, விளை உள்ளிட்ட பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

    இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 2 பெரிய கூறல் மீன்கள் சிக்கி இருந்தன. இதில் ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.

    இந்த 2 மீன்களும் கிலோ ரூ.3,600 வீதம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கு விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி மீனவர்கள் கூறும் போது, "கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது. இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள ஒருவித பாகமானது மருத்துவ குணம் கொண்டது. விலை உயர்ந்த சூப் தயாரிக்கவும் பயன்படுகிறது" என தெரிவித்தனர்.

    • பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
    • 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் அன்றைய தினம் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

    சென்னையில் வைக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகள் வாலாஜாபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

    இது தொடர்பாக விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சத்திய நாராயணன் என்பவர் கூறும்போது, முதல்கட்டமாக வாலாஜாபாத்தில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொசப்பேட்டையில் சாலையில் வைத்தே சிலைகளை விற்பனை செய்வதால், வெயில், மழையால் பாதிக்காத வகையில் பிரத்யேகமான பெரிய கவர் போட்டே மூடி வைப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தவிர எண்ணூர் மற்றும் எர்ணாவூரிலும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை மாநகரில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், பல்வேறு பாகங்களாக எடுத்து வரப்பட்டு மேற்கண்ட இடங்களில் வைத்தே இறுதி வடிவம் பெறுகின்றன.

    எண்ணூர், எர்ணாவூர் ஆகிய 2 இடங்களிலும் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் பாகங்களை ஒன்று சேர்த்து வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிமுறைகளை கடைபிடித்து 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
    • குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.

    இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.

    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4, 919 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 1,961 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.23.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.50.40 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,109 கிலோ. கொப்பரை கிலோ ரூ.50.15 முதல் ரூ.75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.72.15.ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது.
    • இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.

    இதேபோல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவு.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளன.

    எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்காக சந்தே கிக்கப்படும் பகுதிகளில் போலீசார் ேராந்து சுற்றி வருகிறார்கள்.

    வேம்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் கஞ்சாவுடன் இரண்டு வாலி பர்கள் நிற்பதாக வெள்ளிச் சந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வெள்ளிச்சந்தை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சூரப்பள்ளம் அஜித் என்ற அஜித்குமார் மற்றும் தோப்புகளை சுதன் (வயது 23) ஆகிய இரண்டு பேரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக நிற்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.

    16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
    • இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.

    திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.

    இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

    • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்து நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 54 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.

    • காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

     காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 56 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 36 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    ×