என் மலர்
நீங்கள் தேடியது "Agricultural Products"
- ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.
இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.
16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.
எள்
மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.64 குவிண்டால் எடை கொண்ட 5,354 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.05-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.41ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 415.56 குவிண்டால் எடை கொண்ட 815 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.75.55-க்கும், சராசரி விலையாக ரூ.83.99-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.62-க்கும், சராசரி விலையாக ரூ.78.08-க்கும் என மொத்தம் ரூ.30லட்சத்து 78ஆயிரத்து 288-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.31 லட்சத்து 19 ஆயிரத்து 631-க்கு விற்பனையானது.
- நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
- வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.
இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.00 1/2குவிண்டால் எடை கொண்ட 6993 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.49-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.61ஆயிரத்து 194-க்கு விற்பனையானது.
அதேபோல் 244.57குவிண்டால் எடை கொண்ட 503-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.12-க்கும், சராசரி விலையாக ரூ.75.75-க்கும் என மொத்தம் ரூ.18லட்சத்து 60ஆயிரத்து 696-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19லட்சத்து 21 ஆயிரத்து890-க்கு விற்பனையானது.
- மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
- எராளனோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மாவட்ட துணை இயக்குனர் கண்ணகி தலைமையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் வேளாண்மை அலுவலர் பிரதிபா முன்னிலை வகித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அனைத்து விவசாயக் பண்ணைக்கருவிகள் தார்பாலின், ஜிப்சம், ஜிங்சல்பேட், விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கண்ணகி தெரிவித்தார்.
அதேபோல நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிரிட தேவையான உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கம் வட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி கேட்டுக் கொண்டார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், சரவணன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 23.73 குவிண்டால் எடை கொண்ட 8,012 தேங்காய் விற்பனைக்கு வந்தது.
இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.15-க்கும், சராசரி விலையாக ரூ.25.15-க்கும் என மொத்தம் ரூ.58ஆயிரத்து 121-க்கு விற்பனையானது.
228.02 குவிண்டால் எடை கொண்ட 467-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.76-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனை ஆனது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.91-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 73ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.
36.35 குவிண்டால் எடை கொண்ட 50-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.144.10-க்கும், சராசரி விலையாக ரூ.158.10-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 218-க்கு விற்பனையானது.
194.25 குவிண்டால் எடை கொண்ட 592-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 6ஆயிரத்து 875-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.38 லட்சத்து 3 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்,அக்ரிகார்ட் என்னும் வர்த்தக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இணையதளம் வாயிலாக நெல், பயிறு வகை, எண்ணெய் வித்து, இடுபொருட்கள் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், அக்ரிகார்ட் என்னும் வர்த்தக இணையதளம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளு க்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும், ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தை வேளாண் பல்கலை க்கழகம் துவங்கியுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயிறு வகை, எண்ணெய் வித்து, பயிர் பூஸ்டர்கள், இடுபொரு ட்கள் காய்கறி விதைகளை ஆர்டர் செய்து, வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
துணைவேந்தர் கீதால ட்சுமி கூறுகையில், பொது மக்கள், விவசாயிகள் https://www.tnauagricart.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்க ளை பெற்றுக்கொள்ளலாம். முதல்கட்டமாக, 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகப்படு த்தப்படும். மதிப்பு கூட்ட ப்பட்ட வேளாண் பொரு ட்களும் விற்பனை பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.
- ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
- இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் கீழ் 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம்,
2 உப விற்பனை கூடங்கள் இயங்குகின்றன. இங்கு மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட 20-க்கும் மேற்ப ட்ட விளை பொருட்கள் ஏல முறையில் போட்டி விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த 2022–-23-ல் 2 லட்சத்து 40 ஆயிரத்து 063 டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அரசுக்கு ரூ.14.24 கோடி வருவாய் கிடைத்தது.
மேலும் 80,101 டன் விளை பொருட்களை பரிவர்த்தனை மற்றும் இருப்பு வைத்து பொருளீட்டு கடனாக ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு உட்பட்ட பர்கூர் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
காய்கறி, கீரை, பழங்கள், இதர வேளாண் பொருட்கள் சத்தியமங்கலம், கோபி, புன்செய் புளியம்பட்டி, அந்தியூர், கொடுமுடி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 5,489 டன் இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
தேசிய வேளாண் சந்தை திட்டம் எனப்படும் இ–நாம் திட்டம் ஈரோடு, பெருந்துறை, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022-ல் அவல்பூந்துறை, பூதப்பாடி, பவானி, கொடுமுடி, சிவகிரி, புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, வெள்ளாங்கோவில், எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும் இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள், 224.32 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
தவிர இநாம் செயலி மூலம் தங்கள் பண்ணையில் இருந்தே தரம், அளவு ஆகியவற்றை அதிகாரிகள் உதவியுடன் பதிவேற்றியும் பண்ணை வழி பரிவ ர்த்தனை செய்கின்றனர்.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் அவல்பூந்துறை, எழுமா த்தூர், கொடுமுடி, சத்திய மங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கடந்தாண்டு 2,081 டன் கொப்பரை தேங்காய் கொள்முதலானது.
நடப்பாண்டு அவல்பூ ந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, பவானி, மைலம்பாடி, பூதப்பாடி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, வெப்பிலி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இவற்றை பயன்ப டுத்தி உயர்த்த விலையில் விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 80.89 1/2 குவிண்டால் எடை கொண்ட 21 ஆயிரத்து 573 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.79-க்கும், சராசரி விலையாக ரூ.25.25-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 90ஆயிரத்து 639-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 216.34 1/2 குவிண்டால் எடை கொண்ட 438 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.88.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.86.19-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.26-க்கும், சராசரி விலையாக ரூ.77.16-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து ஆயிரத்து 50-க்கு விற்பனையானது.
எள்
259.77 குவிண்டால் எடை கொண்ட 348 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.29-க்கும், சராசரி விலையாக ரூ.156-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.29-க்கும், சராசரி விலையாக ரூ.154-க்கும் என மொத்தம் ரூ.38லட்சத்து 60ஆயிரத்து 560-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 57லட்சத்து52 ஆயிரத்து 249-க்கு விற்பனையானது.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.35 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
- முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.29-க்கு விற்பனையானது
கரூர்:
கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 75.52½ குவிண்டால் எடை கொண்ட 20 ஆயிரத்து 949 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.15-க்கும், சராசரி விலையாக ரூ.19.95-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 836-க்கு விற்பனையானது. அதேபோல் 208.77 குவிண்டால் எடை கொண்ட 441 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.79-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.59-க்கும், சராசரி விலையாக ரூ.74.25-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 79 ஆயிரத்து 464-க்கு விற்பனையானது. 136.61 குவிண்டால் எடை கொண்ட 184 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.136.59-க்கும், சராசரி விலையாக ரூ.146.09-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.09-க்கும், சராசரி விலையாக ரூ.143.09-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 541-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.35 லட்சத்து 2 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகு திகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடை பெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமா நிலங்களை சேர்ந்த வியா பாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 90.31½ குவிண்டால் எடை கொண்ட 23 ஆயி ரத்து 930 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.55-க்கும், சராசரி விலையாக ரூ.20.59-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 656-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 166.25 குவிண்டால் எடை கொண்ட 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.49-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.75-க்கும், சராசரி விலையாக ரூ.71.85-க்கும் என மொத்தம் ரூ.11லட்சத்து92 ஆயிரத்து 828-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 172.78 குவிண்டால் எடை கொண்ட 232 மூட்டை எள் விற்ப னைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.11-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.145.59-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.39-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.23லட்சத்து 56ஆயிரத்து 326-க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 37லட்சத்து17 ஆயிரத்து 810-க்கு விற்பனையானது.