search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.18.76 லட்சத்துக்கு விற்பனை
    X

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.18.76 லட்சத்துக்கு விற்பனை

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 51.84½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 233 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.45-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.01-க்கும், சராசரி விலையாக ரூ.20.60-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 475-க்கு விற்பனையானது.

    அதேபோல் 256.48 குவிண்டால் எடை கொண்ட 549 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.99-க்கும், சராசரி விலையாக ரூ.73.29-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.89-க்கும், சராசரி விலையாக ரூ.67.79-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 73ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் மட்டும் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 18 லட்சத்து 75 ஆயிரத்து 892-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×