என் மலர்
நீங்கள் தேடியது "குண்டர் சட்டம்"
- ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
- டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைதானார்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதனால் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது.
- வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும்.
சென்னை :
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 17 பேர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தரவுக்கான அனுமதி ஆகியவற்றில் காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், காவல் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. தீர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும் என்றனர்.
- திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாக்குமணி என்கிற மணிகண்டன் (வயது 29) மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த லிங்கன் (23) ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்களது தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பாக்கு மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் லிங்கன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வாணியம்பாடி:
வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் கடந்த 17-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜசேகர் தொடர்ந்து அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
- குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.
இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.
- பாளை. ஜெயிலில் அடைப்பு
- இதுவரை 70 பேர் மீது பாய்ந்தது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இது வரை கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் கைது செய் யப்பட்டவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகளில் உள்ள வர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 70 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தர விட்டார்.இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் செல்வராைஜ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
- கொலை வழக்கில் சுடலை என்ற சுடலை மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
- 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (வயது27) என்பவர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலை என்ற சுடலை மகாலிங்கம் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தாளமுத்துநகர் பூபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த அழகுமுத்து, முருகன் மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சாலையப்பன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ராதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (34) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்த இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாரைக்கிணறு இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 233 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- பந்தல்ராஜா உள்ளிட்ட 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
- இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 249 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 20) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இதில் கைதான நெல்லை மாவட்டம் பாளை சாந்திநகர் மெயின்ரோடு பகுதியை பந்தல்ராஜா(34), கயத்தாறு பகுதியை சேர்ந்த அஜித்கண்ணன் (27), வெயிலுமுத்து (44), ஜெயமணிகண்டன் (21), மாரியப்பன் (19), பாளையை சேர்ந்த இசக்கிராஜா (27) மற்றும் மார்ட்டின் (21) ஆகியோரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். கடந்த 21-ந்தேதி தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (22), பிரதீப்குமார் (22) மற்றும் லிங்கம்(64) ஆகியோரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (22) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 11 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 249 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
- கொலை வழக்கில் எர்னஸ்ட் பால் என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
- இதுவரை 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த துஷாபந்த் பெஹரா (வயது25) என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் (42) என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி எர்னஸ்ட் பால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த எர்னஸ்ட் பால் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். அவரது உத்தரவின் பேரில் எர்னஸ்ட் பாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 251 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- உத்தரவு நகலினை சிறை அதிகாரியிடம் வழங்கினர்.
அரியலூர்:
அரியலூரில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே கடந்த மாதம் 6-ந்தேதி இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், கொளக்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 37), விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா (48) ஆகிய 2 பேரையும் அரியலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது அரியலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று ரமேஷ், முனியாண்டி ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமேஷ், முனியாண்டி ராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் அரியலூர் போலீசார் வழங்கினர்."
- 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால்
பெரம்பலூர்:
ஓட்டக்கோவில் கிராமம் அருகே கடந்த மாதம் போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த ராயம்புரம் காலனி தெருவை சேர்ந்த அர்ஜுனனின் மகன் பிரகாஷ் என்ற பிரகஸ்பதி(வயது 24), ஓட்டக்கோவில் காலனி தெருவை சேர்ந்த கந்தசாமியின் மனைவி மதியழகி, மதியழகியின் மகன்கள் இனிக்கும்சேட்டு(34) கோல்டு வினோத்(31) ஆகிய 4 பேரையும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து மதியழகியை திருச்சி மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் வெளியே வந்தால் பல்வேறு சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு இதுவரை 72 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
- 72-வது ஆளாக குளச்சலில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தொடர்ந்து குற்ற செயல் களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 71 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். திருவட்டாறு செருகோல் பகுதியைச் சேர்ந்தவர் வினு (வயது 22). இவரை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா கைது செய்தார்.கைது செய்யப்பட்ட இவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து வினுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து வினு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட் டார். இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.






