search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thug act"

    • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சென்னை பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் இந்திலி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் முருகேசன் (வயது 43) பி.பார்ம் படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்ததும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் குறளியன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முருகேசனுக்கு உதவியாளராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சட்டவிரோதமாக செயல்படும் மையங்களில் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.

    கருக்கலைப்பு செய்வதால் பாலின விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே பாலின சமத்துவத்தை உணர்ந்து ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் சாதிக்கலாம் என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக நல மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) பொன்னரசு கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். சட்ட விரோதமாக நடைபெறும் கருக்கலைப்பு மையங்களில் 90 சதவீதம் பேர் பெண் சிசுக்கலையும், சுமார் 10 சதவீதம் முறையற்ற உடல் உறவினால் உருவாகும் கருவினையும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் வளரும் சிசுவிற்கு மருத்துவ ரீதியாக குறைபாடுகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படும்.இவ்வாறு கருக்கலைப்பு செய்யப்படும் பெண்களுக்கு மனநல மருத்துவரால் மன ஆற்றுதல் சிகிச்சையும் வழங்கப்படும். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இது போன்று சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதன் மூலமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

    கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த வக்கீல் செல்வநாயகம் கூறுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலங்களில் அதிக அளவில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 10 தினங்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெண் பிள்ளைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் அது சமூகத்தின் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என கூறினார்.சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய முருகேசன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் என்பதும், முருகேசன் இது போன்ற வழக்கில் 4-வது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் மணி (வயது 23). இவர் கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் கட்டைகளுடன் சுற்றினார். மேலும், சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு சிலரின் மீது தாக்குதலும் நடத்தினார்.இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில், புதுவை மாநிலத்தை சேர்ந்த மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பாலா மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 64 சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்பட 547 போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.

    இதில் 4 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் சூதாடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கொலை முயற்சியில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டி ருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இதில் அவர் பொதுமக்க ளுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை நகர் கூடுதல் பொறுப்பு போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சதீஷ்கு மாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

    காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் என்ற குட்டமணி (22). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இதில் பொதுமக்க ளுக்கும், பொது அமை திக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் போலீசார் மணி கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    கீரைத்துரை மேல தோப்பு 3-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரவணன் என்ற கோபி சரவணன். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் உத்தர வின்பேரில் போலீசார் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    மதுரையில் ஒரே நாளில் 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத் தில் கைது செய்துள்ளனர்.

    • துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட் டம் தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்த காசி மகன் அருள்கு மார் (வயது 37). இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த மே மாதம் 31-ந் தேதி துப்பாக்கி யால் சுட்டும் கத்தியால்வெட் டியும் படுகொலை செய்தனர்.

    இது குறித்து தச்சம்பட்டு 'போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த மாமலை வாசன் (31), தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகு தியைச் சேர்ந்த இளங்கோ வன் (33), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங் கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), உலகலாப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (22), சங்க ராபுரம் டவுன் லோகநாதன் (வயது 32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த னர்.

    இவர்கள் குற்ற சம்பவங் களில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பரிந்துரைத்தார்.

    அதன் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டதைய டுத்து அதற்குண்டான நகல் வேலூர் சிறையில் இருப்ப வர்களிடம் வழங்கப்பட்டது.

    • சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • எஸ்.பி. எச்சரிக்கை
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    குற்றங்கள் தடுப்பது குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி. மணிவண் ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    கோர்ட்டில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை, நிலுவையின்றி தாக்கல் செய்ய பட்டியல்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

    மக்கள் அளிக் கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும். போலீசாரின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், டிஎஸ்பிக் கள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    • குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
    • அதன்பேரில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனி வேல் மகன் பூபதி ராகவேந்தி ரன். இவர் வழிப்பறி உள் பட்ட பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தார். இதனால் இவருடைய குற்ற செயல் களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் உத்தரவின்பேரில் போலீசார் பூபதி ராகவேந்தி ரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் பார்த்தசாரதி 21. இவர் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஈடு பட்டு வந்தார். தொடர்ந்து இவர் இந்தச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை யும் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    பி.டி.ஆர். மெயின் ரோடு இந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் என்ற குட்டீஸ். இவர் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் .மதுரையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
    • சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48).

    இவர் அதே பகுதியில் உள்ள 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்தமாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இவரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரை யின்பேரில் கலெக்டர் வளர்மதி, மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

     மயிலாடுதுறை:

    சீர்காழி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    கண்ணாடி உடைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் கண்ணாடியை கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

    இதில் அரசு பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் லேசான காயங்களோடு உயிர் தப்பினர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் சீர்காழி அருகே உள்ள தெற்கு தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (வயது22) என்பவர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×