என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கலெக்டர் உத்தரவு
- ஜெயிலில் அடைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டம் சிப்காட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் வாலாஜா தாலுகாவானா பாடிகிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் (வயது 44) என்பவரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அதே போல், வாலாஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலையில் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் ராசாத்துபுரம் பகுதியைச் சேர்ந்த குமரன்(29) என்பவரை ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், சோளிங் கர் அருகே கொலை வழக் கில் சோளிங்கர் தாலுகா ஐப்பேடு கிராமத்தைச்
சேர்ந்த அசோக்பாண் டியன்(24), கோபி(24), தாமோதரன்(24) ஆகி யோரை சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடு பட்டு வரும் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்ய எஸ்பி தீபா சத்யன். கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரைத்தார் .
அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணத்தை போலீசார் வழங்கினர்.