என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
- திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாக்குமணி என்கிற மணிகண்டன் (வயது 29) மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த லிங்கன் (23) ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்களது தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பாக்கு மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் லிங்கன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






