என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து- ஐகோர்ட் உத்தரவு
    X

    ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து- ஐகோர்ட் உத்தரவு

    • இவ்வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    • ஞானசேகரனின் தாயார் கங்காதேவி வழக்கு தொடர்ந்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×