என் மலர்
நீங்கள் தேடியது "போலி மருந்து"
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர்.
- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீர்காழியை சேர்ந்த ரானா, காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் என தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 பேரையும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர். அப்போது கதவுகள் மூடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொழிற்சாலைக்கு வந்த டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் போலி மருந்து தொழிற்சாலை மற்றும் குடோன்களை சோதனையிட்டு போலி மருந்துகளை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல் 4 குடோன்களில் இருந்த பல கோடி மதிப்புள்ள போலி மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்தனர்.
- வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
- சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.
போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.
வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.
ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.
மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆய்வு செய்வதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
புதுடெல்லி:
தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.






