என் மலர்
நீங்கள் தேடியது "CBI Investigation"
- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நீதி வெல்லும்!" என பதிவிட்டுள்ளார்.
- திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை.
- திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.
ஏன் பதறுகிறீர்கள் திமுக ? என்ன தவறு செய்தீர்கள்?
வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?
நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?
திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
- சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
தொடர்ந்த, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த தவெக-வுக்கோ சம்பந்தப்பட்ட வழக்கு என்று மூடி மறைக்க கூடாது. இது 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.
அதனால்தான் நாங்கள் நேரடியாக 41 உயிர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் தான் ஒருநபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினோம்.
சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.
பாஜகவின் 2 தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.
கரூர் விவகாரத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் பிரமுராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள்.
- தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த வருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சி.பி.ஐ. விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சி.பி.ஐ. விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?
எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?. தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சி.பி.ஐ. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல அவர்கள் செயல்படுவார்கள். அதனால் அதைப் பேசி பயனில்லை.
சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தோல்வி தான் என ஒப்புக்கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும் திசை திருப்பிவிடும்.
நாளையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கி விடுமா?. சி.பி.ஐ.யின் புலன் விசாரணை சரியாக இருக்காது. கேப்டன் விஜய காந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது தி.மு.க. அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் தி.மு.க. அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.
கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை.
ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்தது தான்.
விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.
எதையாவது செய்து விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
- கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் மிகவும் துயரமானவை. காவல்துறையினர், பரப்புரைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அளவுக்கு அதிகமான பதட்டம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே , காவல்துறை சார்பில், தங்கள் மீது இதில் எந்தத் தவறும் இல்லை என்று தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட விளக்கம் ஆகியவை தான் இந்த விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் இருக்குமோ? என்ற ஐயத்தை வலுப்படுத்தியது.
அதனால் தான் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி மேற்பார்வையில் விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பதன் முலம் இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.
உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.
- சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
- வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
பல்லடம்:
பல்லடத்தைச் சேர்ந்த சிவகுமார் அவரது அண்ணன் விஜயகுமார், விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி,மற்றும் தமிழரசன், பிரவினா ஆகியோர் கூட்டாக சேர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பிரவீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழரசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக புகார் தாரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-ரூ.100 கோடி மோசடி குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க பல்லடம் போலீசார் தாமதப்படுத்தியதால், இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தோம்.இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ. க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
- வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.
பல்லடம் :
பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.
கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
- நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சி.பி.ஐ. வழக்கை விசாரித்து வருகிறது.
இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ. இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் டி.ஜி.பி., சென்னை காவல் துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்ற விசாரணைக்கும் இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
- கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
- சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.
அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .
இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.
இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
செங்குன்றம் அருகே உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
குடோன் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்படி துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குட்கா முறைகேடு குற்றச்சாட்டு கூறப்பட்டபோது, வடசென்னை பகுதியில் பணியாற்றிய 3 போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த 3 போலீஸ் அதிகாரிகளில் 2 பேர் தற்போது ஐ.ஜி. அந்தஸ்தில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி வெளிமாவட்டத்தில் பணியில் உள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் தகவலை சென்னை போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CBI #GutkaScam
திருச்சி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேசம் காப்போம் மாநாடு ஜனவரி 23-ல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள், தேசிய, மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது நாட்டிற்கு ஆபத்தானது. ஆகவே மதச்சார்பற்ற சக்திகளின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதால் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் ஜனநாயகம், மதச் சார்பின்மை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பங்கேற்க அழைக்கிறேன்.
இந்த பொங்கல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. காரணம் கஜா புயல் பாதிப்பு, அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட நீர் சிக்கல்களால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு நிறுவன கொள்கைகளால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை விவசாயிகள் பாதுகாப்பு நாளாக நினைவு கூர்கிறோம்.
கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக சாமுவேல் மேத்யூஸ் சுமார் 15-16 நிமிட வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகியோரை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்தது.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதிபதி விடுவித்துள்ளார். தமிழக காவல்துறை அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யும் அளவு வழக்குகளை பதிவு செய்யவில்லை. இது காவல்துறை, தமிழக அரசின் தடுமாற்றத்தினை வெளிப்படுத்துகிறது.
முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை குழுவோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அது அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் வாய்ப்பு என கருதி கேட்டுக் கொள்கிறோம்.

கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் அந்த அளவு சேதாரங்கள் ஏற்பட வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட வருவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.
ஆனால் எதிர்பார்த்தபடி பிரதமர் வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். இதனை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பதோடு, தேர்தலில் தக்க பாடத்தினை பா.ஜ.க.விற்கு புகட்டுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் பயணிக்கிறது. அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த கூட்டணியில் 9 கட்சிகள் மற்றும் பல கட்சிகள் உள்ளனர். இதில் 2-வது கருத்திற்கோ மாற்றுக்கருத்திற்கோ இடமில்லை.
அ.தி.மு.க.-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என கூறியுள்ளது. ஒரே அணியிலோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிடலாம். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே சமீப காலமாக இடைவெளி இருப்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது. இரு அணிகளுக்கும் இடையே தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை. பா.ஜ.க. வுடன் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அது தமக்கு தாமே குழி தோண்டுவது என வி.சி.க. கருதுகிறது.
இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இருதுருவ போட்டியையே பார்த்துள்ளோம். 3-வதாக ஒரு கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவிலோ, மாநில அளவிலோ வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலும் அப்படித்தான். தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறுகிறதா? இல்லையா? என்பது தான் கேள்வி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து திருமாவளவன் மாநாடு நடைபெறும் ஜி கார்னர் மைதானத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan






