என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் விவகாரத்தை திசை திருப்பத்தான் உதவும்: சி.பி.ஐ. விசாரணையால் எந்த பலனும் ஏற்படாது- சீமான்
    X

    கரூர் விவகாரத்தை திசை திருப்பத்தான் உதவும்: சி.பி.ஐ. விசாரணையால் எந்த பலனும் ஏற்படாது- சீமான்

    • விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள்.
    • தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த வருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சி.பி.ஐ. விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சி.பி.ஐ. விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?

    எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?. தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சி.பி.ஐ. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல அவர்கள் செயல்படுவார்கள். அதனால் அதைப் பேசி பயனில்லை.

    சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தோல்வி தான் என ஒப்புக்கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும் திசை திருப்பிவிடும்.

    நாளையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கி விடுமா?. சி.பி.ஐ.யின் புலன் விசாரணை சரியாக இருக்காது. கேப்டன் விஜய காந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது தி.மு.க. அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் தி.மு.க. அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.

    கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை.

    ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்தது தான்.

    விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    எதையாவது செய்து விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×