என் மலர்
நீங்கள் தேடியது "college students"
- சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
- மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.
இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.
அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
- சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
- கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.
சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.
அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.
பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.
ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அருண்குமார், ஸ்ரீ கவுதமன் இருவரும், நண்பர்களுடன் கேரளா சென்றிருந்தனர்.
- இருவரும் நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர், திடீரென நீர் சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் அருண்குமார், ஸ்ரீ கவுதமன் இருவரும், நண்பர்களுடன் கேரளா சென்றிருந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இருவரும் நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
- தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க, நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்ற, உங்களுக்கு உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
* சரும பராமரிப்பு
சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. உங்களது சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். அடுத்ததாக, சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.

* தலைமுடி பராமரிப்பு
தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
* சூரிய ஒளி
சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.
* முக அழகு
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.
* உடல் பராமரிப்பு
கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். உடலுக்கு நீங்கள் லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும் மற்றும் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அப்போதுதான் பேசும்போது துர்நாற்றம் அடிக்காது. நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள் மற்றும் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* சிம்பிள் மேக்கப்
தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள். அதாவது ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.
- கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. கொலை திட்டத்தை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ரவுடி வசூல்ராஜா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா 2 கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகராறில் கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க ரவுடிகளிடையே தொடர்ந்து மோதல் மற்றும் கொலைகள் அரங்கேறி வந்தன. எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது வசூல் ராஜாவால் தீர்த்து கட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் திட்டமிட்டு இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
- கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
- வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில் குமார், புதுவை தொழிலாளர் நீதிபதி ஷோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- கூடுதல் போதைக்காக கஞ்சாவுடன் மாத்திரைகள் கலந்தனர்.
- 2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
சூலூர்,
சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் பலர் தனியாக வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.
2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரின் நண்பர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து இந்த அறையில் தங்கினார்.
சென்னையில் இருந்த வந்த நபர், வரும்போதே கஞ்சா பொட்டலங்களுடன் வந்துள்ளார். இதையடுத்து சென்னை வாலிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கஞ்சா பிடித்துள்ளனர்.
இதைபார்த்த அறையில் இருந்த மற்ற 2 பேர் வெளியில் எழுந்து ெசன்று விட்டனர்.
பின்னர் இரவில் அறைக்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் மேலும் 2 பேர் இருந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே 2 பேரும் நமது அறைக்கு வெளியாட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என கேட்டார். போதையில் இருந்த 4 வாலிபர்களும் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் சென்னை வாலிபர் தான் கொண்டு வந்த கஞ்சாவை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு, அதனுடன் சோடா, கூல்டிரிங்ஸ், மாத்திரைகளை போட்டு பாட்டில் பக்கவாட்டில் ஒரு சிறிய குழாயை சொருகி அதனை உறிஞ்சினர்.
பின்னர் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் உறிஞ்சுமாறு அடித்தனர். அவர்கள் என்னவென்று கேட்டபோது, இது கஞ்சா தேவாமிர்தம் என பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் புகைக்க மறுத்தனர். இதனால் கோபம் கொண்ட 4 பேரும் மீண்டும் அவர்களை தாக்கினர்.
இதனால் பயந்து போன கல்லூரி மாணவர், அதனை புகைத்தார். இதில் அவர் மயக்கமானார். ஆனால் அவரது நண்பர் ெதாடர்ந்து மறுத்தார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து கல்லூரி மாணவரின் நண்பரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர்.
பின்னர் அந்த வாலிபரை பல்வேறு கோணங்களில் புகைப்படமும் எடுத்தனர். மயக்கம் அடைந்த கல்லூரி மாணவரின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு மேலும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டினர்.
பின்னர் அங்கிருந்து 4 பேரும் வெளியில் சென்று விட்டனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் நடந்த சம்பவங்கள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் இங்கு வந்து, அவர்களுடன் தங்கி மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவரை பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அறையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து கஞ்சா மற்றும் தேவாமிர்தத்தின் மிச்சம், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
- செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர்.
சங்கரன்கோவில்:
கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். கல்லூாி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிாியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் கோமதி, குமாா் ஆகியோா் மாணவர்களை வழிநடத்தினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் புன்னைவனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்த செயலியின் பயன்பாடுகள் குறித்து, அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் விவரித்தனர். அந்த செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர். இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிாியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் விவரித்தனர்.
- அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
- தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
மதுரை
மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விதிமுறை களை மீறி செல்வோரை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். ரிசர்வ் லைன், ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 5 பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் கோசாகுளம், பெரியார் நகர் வல்லரசு (வயது 33), ஆனையூர் குமார் மகன் அருண் பாண்டியன் (23), கோசாகுளம், பாண்டியன் நகர் கண்ணன் மகன் வருண் பாலாஜி (24), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் நசீர் உசேன் மகன் முஜிபுர் ரஹ்மான் (19) மற்றும் தபால் தந்தி நகர், பார்க் டவுன் ஆதிஸ்வரன் மகன் சிவபாலன் (23) என்பது தெரியவந்தது. அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை கட்ட பொம்மன் நகர் சந்திப்பு முதல் 50 அடி ரோடு வரை அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 3 மோட்டார் சைக்கிள்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை குருவிக்காரன் சாலை சினிமா தியேட்டர் முன்பு அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக சிம்மக்கல், அபிமன்யு தெரு கருப்பையா மகன் சந்தோஷ் (19), கே.கே.நகர், பாரதியார் தெரு ராமலிங்கம் மகன் கவுரவ் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை குருவிக்காரன் சாலை ஆஸ்பத்திரி அருகே அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அய்யர் பங்களா, அய்யாவு நகர் சிதம்பரம் மகன் தீபக் (24), தல்லாக்குளம் பச்சைக்கிளி மகன் சூர்யா (21) ஆகிய 2 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
- மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
- தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.
பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்






