search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதையில் வாலிபரை தாக்கி நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்த கல்லூரி மாணவர்கள்
    X

    போதையில் வாலிபரை தாக்கி நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்த கல்லூரி மாணவர்கள்

    • கூடுதல் போதைக்காக கஞ்சாவுடன் மாத்திரைகள் கலந்தனர்.
    • 2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

    சூலூர்,

    சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் பலர் தனியாக வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.

    2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரின் நண்பர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து இந்த அறையில் தங்கினார்.

    சென்னையில் இருந்த வந்த நபர், வரும்போதே கஞ்சா பொட்டலங்களுடன் வந்துள்ளார். இதையடுத்து சென்னை வாலிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கஞ்சா பிடித்துள்ளனர்.

    இதைபார்த்த அறையில் இருந்த மற்ற 2 பேர் வெளியில் எழுந்து ெசன்று விட்டனர்.

    பின்னர் இரவில் அறைக்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் மேலும் 2 பேர் இருந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே 2 பேரும் நமது அறைக்கு வெளியாட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என கேட்டார். போதையில் இருந்த 4 வாலிபர்களும் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    மேலும் சென்னை வாலிபர் தான் கொண்டு வந்த கஞ்சாவை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு, அதனுடன் சோடா, கூல்டிரிங்ஸ், மாத்திரைகளை போட்டு பாட்டில் பக்கவாட்டில் ஒரு சிறிய குழாயை சொருகி அதனை உறிஞ்சினர்.

    பின்னர் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் உறிஞ்சுமாறு அடித்தனர். அவர்கள் என்னவென்று கேட்டபோது, இது கஞ்சா தேவாமிர்தம் என பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் புகைக்க மறுத்தனர். இதனால் கோபம் கொண்ட 4 பேரும் மீண்டும் அவர்களை தாக்கினர்.

    இதனால் பயந்து போன கல்லூரி மாணவர், அதனை புகைத்தார். இதில் அவர் மயக்கமானார். ஆனால் அவரது நண்பர் ெதாடர்ந்து மறுத்தார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து கல்லூரி மாணவரின் நண்பரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர்.

    பின்னர் அந்த வாலிபரை பல்வேறு கோணங்களில் புகைப்படமும் எடுத்தனர். மயக்கம் அடைந்த கல்லூரி மாணவரின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு மேலும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டினர்.

    பின்னர் அங்கிருந்து 4 பேரும் வெளியில் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் காயம் அடைந்த கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் நடந்த சம்பவங்கள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் இங்கு வந்து, அவர்களுடன் தங்கி மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவரை பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அறையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து கஞ்சா மற்றும் தேவாமிர்தத்தின் மிச்சம், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×